திண்டுக்கல், ஜன.3. ஒன்றிய பாஜக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த சாதக மான அறிவிப்பையும் வெளியிடாத தைக் கண்டித்து தமிழ்நாடு அனை த்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பாக பிப்ரவரி 3 வெள்ளி யன்று பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கிராமப்புற மாற்றுத்திறனாளி களுக்கு பிரதான வேலை வாய்ப்பாக இருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை குறைத் தது. உதவித்தொகையை உயர்த்த வில்லை என பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்ட தால் நாடு முழுவதும் கோடிக் கணக்கான மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
எனவே இந்த பட் ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றன. திண்டுக்கல் அய்யலூரில் பேருந்து நிலையம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யத்தலைவர் குழந்தைவேல் தலை மை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெயந்தி, வடமதுரை ஒன்றியச்செயலாளர் முத்துப் பாண்டி, பொருளாளர் சரவணக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளிமந்தயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் பகத்சிங், தொப்பம்பட்டி ஒன்றி யச்செயலாளர் காளீஸ்வரி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்வ ராஜ், மற்றும் மணிகண்டன் ஆகி யோர் பேசினர். திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகிகள் சசிக்குமார், ஆறுமுக வள்ளி, கந்தசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் மதுரை மாநகர் சார்பில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மாவட்டத் தலைவர் பி. வீரமணி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டச் செய லாளர் ஆ. பாலமுருகன், இணைச் செயலாளர்- மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், உதவித் தலைவர் பா. பழனியம்மாள், மாநில துணைச் செயலாளர் எம். சொர்ண வேல் ஆகியோர் பேசினர், பகுதிக்குழு செயலாளர் வி. வேலு மற்றும் பலர் பங்கேற்றனர்.