districts

img

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

விருதுநகர், மே 22- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துவகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் ஆர்.டி.ஓ  தலைமையிலும், இரு மாதங்  களுக்கு ஒருமுறை ஆட்சி யர் தலைமையிலும் குறை தீர்  கூட்டம் நடத்த வேண்டும்.  விருதுநகர் மாவட்டக் கண்காணிப்புக்குழுவில் சங்கத்தை இணைக்க வேண்  டும். மாத உதவித் தொகை யை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மாநிலத்  தலைவர் டி.வில்சன் மாவட்டச் செயலாளர் கே. நாகராஜ், மாவட்டப் பொரு ளாளர் பி.அன்புச்செல்வன், மாவட்டத் துணைத் தலை வர்கள் ஏ.குமரேசன், எம். அய்யக்காள், ஸ்ரீதேவி, மாவட்டத் துணைச் செய லாளர்கள் பி.சரவணன், என்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வதிஷ்ட ராஜன், சுப்புராஜ், ஜெய ராணி, எஸ்.மாரீஸ்வரி, கைலா  சம், முனீஸ்வரி உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாற்  றுத் திறனாளிகள் நல அலு வலர் சந்திரசேகர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, “மாற்றுத்  திறனாளிகள் கோரிக்கை கள் தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் மற்றும் கோட்  டாட்சியர்  தலைமையில் குறைதீர் கூட்டங்கள் நடத்  தப்படும். மாற்றுத்திறனாளி கள் குடும்பங்களுக்கு ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக் கப்படும். விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். தகு தியான மாற்றுத் திறனாளி களுக்கு வீடு, வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என  எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தனர்.