மதுரை, டிச.13- மாற்றுத்திறனாளிக ளுக்கு இலவச வீட்டுமனை மற்றும் மாநகராட்சி, நக ராட்சிகளில் ஒதுக்கீடு செய் யப்படும் கடைகளில் 5 சத வீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் மதுரை மாநகர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் டிசம்பர் 13 செவ்வாயன்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி. வீரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஆ. பாலமுருகன் முன் னிலை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் இரா. லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின், அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், காது கேளா தோர் வாய்பேசதோர் சங்க பொருப்பாளர் எம். சொர்ண வேல், மாவட்ட பொருளா ளர் வி. மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.