திண்டுக்கல், மார்ச் 9- கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மாற்று திறனாளிகள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்த ரேவு, பழனி பால சமுத்திரத்தில் போராட்டம் நடத்தினர். ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவில் நடைபெற்ற ஒப்பாரிப் போராட்டத் திற்கு ஆத்தூர் ஒன்றியத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். ஒன் றியச் செயலாளர் மலைச்சாமி, மாவட்டத் தலைவர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர். பழனி பாலசமுத்திரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யத் தலைவர் மணிகண்டன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பகத்சிங், ஒன்றியச் செயலாளர் கன்னிச்சாமி, ஒன்றியப் பொரு ளாளர் பாலகுமார், பழனி நகர் செயலாளர் தங்கவேல் உட்பட 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் பங்கேற்றனர். மாதர் சங்கம் உலகம்பட்டியில் சிலிண்டரில் ஒலி எழுப்பும் போராட்டத்தை மாதர் சங்கம் நடத்தியது. ஆர்ப்பாட்டத் திற்கு பாக்கியம் தலைமை வகித் தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாற் றுத் திறனாளிகள் கூறியதாவது:- பல்வேறு தாக்குதலில் சிக் குண்டு கிடக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு மேலும் ஒரு இடியாக கேஸ் விலையை கடந்த வாரம் உயர்த்தியுள்ளது. மோடி அரசு ஆட்சிக்கு வரும் போது அரசு வழங் கிய ஆயிரம் ரூபாய் உதவித் தொகையில் ரூ.440-ஐ மட்டும் கேஸ் வாங்குவதற்காக ஒதுக்கியது. மீத முள்ள பணத்தில் அந்த மாதத் திற்குத் தேவையான மளிகை உள் ளிட்ட பொருட்களை வாங்கி வாழ்க்கை நடத்தி வந்தோம். தற் போது கேஸ் விலையை உயர்த்தப் பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளி களுக்கு மானியத்துடன் கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டுமென்ற னர்.