ஒட்டன்சத்திரம், ஜன.7- மாணவர்களுக்கு வாசிக் கும் பழக்கத்தை ஏற்படுத்த வும், அவர்களின் கல்வி யறிவை மேம்படுத்தவும், போட்டித்தேர்வுகளை எழுது பவர்கள் தங்களை தயார்ப் படுத்திக் கொள்ளும் வித மாகவும் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார் பில் மாவட்ட தலைநகரில் இருந்து கிராமப்புறங்கள் வரை நூலகங்கள் அமைக் கப்பட்டு செயல்பட்டு வரு கின்றன. ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் கிளை நூலகம் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்த கங்களும், மாத, வார இதழ் களும் மற்றும் அனைத்து தின சரி நாளிதழ்களும் உள்ளன. இடையக்கோட்டை மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் இருந்து ஏரளமானோர் நூல கத்திற்கு வந்து படித்து வரு கிறார்கள். இதன் கட்டிடம் கட்டப் பட்டு 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பதால் மேற்கூரையில் சிமெண்ட் பெயர்ந்து விழுந்துள்ளது. கட்டிட சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது. இத னால் இந்நூலகத்திற்கு வாச கர்கள் ஒருவித அச்சத்துட னேயே வந்துசெல்கின்றனர். மேலும் மழைக்காலங் களில், நூலக கட்டிடத்திற் குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் மழை நீரில் நனைந்து வீணாகும் நிகழ்வுகளும் நடந்து வரு கிறது. மழைக்காலங்களில் மொட்டை மாடியில் தேங்கி நிற்கும் தண்ணீர் சிமெண்ட் பூச்சு சேதமடைந்த ஓட்டை வழியாக கீழே இறங்கி புத்த கங்கள் மீது விழுகின்றன. இதனால் புத்தகங்கள் சேத மடைகின்றன. மேலும் நூலகத்தில் அமர்ந்து புத்தகங்கள் படித்து வரும் வாசகர்கள் மேலேயும் மழை தண்ணீர் விழுவதால் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச் சத்தோடு வாசகர்கள் அமர்ந் திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. மழை வந்தால் புத்த கத்தை புத்தகங்களையும், உயிரையும் காப்பதற்கு ஊழி யர்களும், வாசகர்களும் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு இடையக்கோட்டை நூல கத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.