districts

img

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த மக்கள் தொடர்ந்து வலியுறுத்தல்

விருதுநகர், ஏப்.16- சுமார் 31 ஆண்டுகளாக செய லற்ற நிலையில் இருந்து வரும் விருதுநகர் புதிய பேருந்து நிலை யத்தை  வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விருதுநகர் - சாத்தூர் சாலை யில் புதிய பேருந்து நிலையம் கடந்த 1992 மே.,3 கட்டி முடித்து திறக்கப்பட்டது. மாவட்டத் தலை நகரான விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையமானது, திறக்கப் பட்ட போது, அங்கிருந்தே புறநகர்  பேருந்துகள் அனைத்தும் புறப்  பட்டுச் சென்றன. நகரப் பேருந்து கள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்பட்டன. இதனால்,   இரு பேருந்து நிலையங்களும் எவ்  வித பிரச்சனையும் இன்றி செயல் பட்டு வந்தன. இந்தநிலையில், கடந்த 2011- 12 இல்  பைபாஸ் ரைடர் பேருந்துகள்  மற்றும் தொலைதூரப் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலை யத்திற்கு வந்து சென்றன. மேலும் இங்கிருந்து, விருதுநகர்-சென்னை, விருதுநகர்-பெங்களூரு, விருது நகர்-கோவை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து சேவை  தொடங்கப்பட்டது. இதனால்,   பொது மக்கள்  மகிழ்ச்சியடைந்த னர்.   ஆனால், நாளடைவில், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பின்மையால், புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பேருந்துகள் அனைத்தும் படிப்படியாக குறைந்து பேருந்து  சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுதது,  இரவு நேரங்க ளில்  மாவட்டத் தலைநகரான விருது நகருக்குள் தொலைதூரப் பேருந்து கள் எதுவும் வராத நிலை ஏற்பட்டது. இதனால் வெளியூர் சென்று இரவு  நேரங்களில் திரும்பும்  பொது மக் கள் நாள்தோறும்  அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய ஊர்  களில் இரவு நேரத்தில்  புறப்படும் அரசுப் பேருந்துகளில் விருதுநகர் பயணிகளை நடத்துநர்கள் ஏறு வதற்கு அனுமதிப்பதில்லை. மாறாக அவமானப்படுத்தி கீழே இறக்கி  விடுகின்றனர். எப்படியாவது விருதுநகருக்கு செல்ல வேண்டும் என முறையிட்டால், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நிற்கும் சம்ம தமா? என ஒப்புதல் பெற்ற பின்பே  பேருந்தில் ஏற்றிக் கொள்வார்கள். அதேவேளை, அருகே உள்ள மிகச் சிறிய ஊரான திருமங்கலத்திற்குள் பைபாஸ் ரைடர் பேருந்தானது  இரவு பகல் என எந்த நேரமும வந்து செல்கிறது. எனவே, மதுரை-நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி வரை செல்லும் பைபாஸ்-ரைடர் பேருந்துகள்,தொலை தூரப் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து  செல்ல வேண்டும்.   ஆம்னிப்  பேருந்துகள் அனைத்தையும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கிட வேண்டும்.

விருதுநகரில் இருந்து புறப்  படும் தொலைதூரப் பேருந்து களான இராமேஸ்வரம், திருச்  செந்தூர், விருதுநகர்-செங் கோட்டை, குற்றலாம்  உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளும்  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். மேலும்,  விருதுநகர் பேருந்து நிலையத்தில் முன்பு  செயல்பட்டு  வந்த சென்னை உள்ளிட்ட தொலை தூரப் பேருந்துகளுக்கான முன் பதிவு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு கட்சி யினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பல கட்ட போரா ட்டங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், புதிய பேருந்து நிலையத்தை வியா ழனன்று சாத்தூர் வருவாய் கோட்  டாட்சியர் அனிதா, நகராட்சி பொறி யாளர் மணி, வட்டாட்சியர் பாஸ்க ரன், வட்டாரப் போக்குவரத்து அலு வலர், நகர்மன்றத் தலைவர் மாத வன் உள்ளிட்டோர்  புதிய பேருந்து  நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, எம்.ஜி.ஆர். சாலை யின் இருபுறமும் கிராவல் மண் அடிக்க வேண்டும். சாத்தூர் சாலை யில் போக்குவரத்திற்கு இடையூ றாக உள்ள மரம் ஒன்றை அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் மராமத்து பணிகள் செய்திட வேண்டும் என கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த நகராட்சி பொறியாளர் மணி, ஏற்கனவே, கொரோனா காலத்தில் ரூ.38 லட் சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டிடப் பணிகள் நடைபெற்றது. மேலும், தற்போது சுற்றுச் சுவர் கட்டவும், மராமத்து பணிகள் செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை, பேருந்து நிலையத்தினை செயல்படுத்தாத காரணத்தால், பல கோடி ரூபாய்க்கான புதிய திட்டப் பணிகள் வராமல் நிலுவையில் உள்ளன. எனவே, பேருந்து நிலை யத்தை இயக்கிட ஏற்பாடு செய் யுங்கள் என வேண்டுகோள் விடுத்  தார்.