ஒட்டன்சத்திரம், செப்.15- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்ட மனுக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று ரூ.41.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 5,105 பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில் பழனி வருவாய் கோட்டாட்சி யர் சௌ.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ச.சிவக்குமார், ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துச்சாமி, திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.