districts

img

மயிலாடும்பாறை கிராமத்தில் மக்கள் கடையடைப்பு போராட்டம்

கடமலைக்குண்டு, நவ.19- தேனி மாவட்டம், மயிலாடும் பாறை கிராமத்தை சேர்ந்தவர் மொக்கச்சாமிதேவர். இவருக்கு இதே கிராமத்தில் சொந்தமாக விவ சாய நிலம் உள்ளது. அவருடைய விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் பார்வையற்ற தம்பதிகளான ஜெய பால்-நிர்மலா உள்பட 4 பேர் வீடுகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்தனர்.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலத்தை பார்வையற்ற தம்பதிகள் உட்பட 4 பேர் ஆக்கிர மித்து வீடுகள் கட்டியுள்ளதாக மொக்கச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கில் தொடர்ந்தார்.

கடந்த வாரம் வெளியான தீர்ப்பில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து கடந்த 3 நாட்க ளுக்கு முன்பு போலீஸ் பாது காப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. அப்போது மயிலாடும்பாறை கிராம பொதுமக்கள் பார்வையற்ற தம்பதிகளின் வீட்டை மட்டும் இடிக்க வேண்டாம் என மொக்கச்சாமி  வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் மொக்கச்சாமி அதனை ஏற்க மறுத்ததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் பார்வையற்ற தம்பதிகளின் வீட்டை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரை மட்டமாக்கினர். இதனால் மனமு டைந்த ஜெயபால்,நிர்மலா மற்றும் 10 ஆம் வகுப்பு படித்து வரும் அவரது 15 வயது மகள் ஜனனி ஆகி யோர் விஷத்தைக் குடித்து தற் கொலைக்கு முயன்றனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து அனை வரும் வியாழக்கிழமை இரவு மயி லாடும்பாறை கிராமத்திற்கு வந்து  உறவினர் வீட்டில் தங்கினார்.பின்னர் கோவில் இடத்தில் வெட்ட வெளியில் அக்குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.  இந்த நிலையில் வெள்ளிக் கிழமை பார்வையற்ற தம்பதிகளின் வீடு இடிக்கப்பட்டதை கண்டித்தும், மொக்கச்சாமி ஆக்கிரமித்து வைத்துள்ள கிராமத்திற்கு சொந்த மான கோவில் இடத்தை மீட்க வலி யுறுத்தியும் மயிலாடும்பாறை கிராம மக்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் யாரும் பணிகளுக்கு செல்லவில்லை. அதேபோல மயி லாடும்பாறை கிராமத்தில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப் படவில்லை. 

மயிலாடும்பாறை காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் அனைவ ரும் ஒன்று கூடி விவாதித்தனர். அப்போது மயிலாடும்பாறை கிராம  கமிட்டியினர் மூலம் பொதுமக்களி டம் பணம் வசூல் செய்து பார்வை யற்ற தம்பதிகளுக்கு புதிய வீடு கட்டி கொடுப்பது மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வது, அதிகாரிகள் வாயிலாக நிலத்தை முறையாக அளவீடு செய்து கிராமத்திற்கு சொந்தமான கோவில் நிலத்தை மீட்பது  என முடிவு செய்யப்பட்டது. அதேபோல  வீடு இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதிய வீடு கட்டுவதற்கு மொக்கச்சாமி இடம் வழங்க வேண் டும். அதுவரை மொக்கச்சாமியின்  தோட்ட வேலைகளுக்கு யாரும் செல்லக்கூடாது என முடிவு செய்யப் பட்டு ஒலிபெருக்கி மூலம் அறி விக்கப்பட்டது. வீடு இடிக்கப்பட்ட போது மாணவியின் நோட்டு புத்த கங்கள் அனைத்தும் மண்ணில் புதைந்து வீணானது. இதனை யடுத்து கிராம பொதுமக்கள் மாணவி க்கு புதிய பை மற்றும் நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்தனர். ஒரு பார்வையற்ற குடும்பத்திற்காக ஒட்டுமொத்த கிராமமும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி ஒன்றுகூடிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்வையற்ற தம்பதிக் காக கிராமமே திரண்டது மயிலா டும்பாறை மக்களின் மனிதநேயத் தை காட்டுவதாகவும் உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி  மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை கூறுகையில், பார்வையற்ற தம்பதியரின் வீடு இடிக் கப்பட்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அக்குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் பிள்ளைக ளின் படிப்பிற்கும் அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.