திருப்பூர், டிச. 19 - திருப்பூரில் மரங்கள் அடர்ந்த அழகிய சுற் றுப்புறச் சூழலை ஆக்கிரமிப்பு என்று அகற்ற முயற்சி செய்யும் மாநகராட்சி அதிகாரிக ளுக்கு எதிராக குடியிருப்பு மக்கள் கோபாவே சமாக அணி திரண்டனர். அந்த மக்கள் மாநகர மேயரை நேரில் சந்தித்து அதிகாரிகளின் உள் நோக்கமான முயற்சியைப் பற்றி முறையிட் டுத் தடுத்து நிறுத்தினர். விஜயாபுரம் அருகே பழனியம்மாள் நகர் குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திங்களன்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மேயர் ந.தினேஷ்குமாரைச் சந்தித்து முறையிட் டனர். இதைத் தொடர்ந்து இந்த குடியி ருப்பைச் சேர்ந்த எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா, பாலு, பிரகதீஷ்வரன் உள்ளிட்டோர் கூறியதா வது: பழனியம்மாள் நகர் குடியிருப்பு இருபுற மும் மரங்கள் நிறைந்த அழகிய கிராமப்புற சூழல் கொண்ட பகுதியாகும். சில ஆண்டுக ளுக்கு முன்பு பழனியம்மாள் நகருக்குப் பின் புறமுள்ள ஒரு காட்டை தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது உமா உதயா கார்டன் என்ற நிறுவனத்தின் வசம் அந்த இடம் கைமாறி உள்ளது. அந்த நிறுவனம் அந்த நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த இடத் திற்கு முறையான பாதை வசதி இல்லை. இத னால் பழனியம்மாள் நகர் 4ஆவது வீதியை அந்த மனைப் பிரிவுக்கு செல்லும் பிரதான பாதையாகக் காட்டி மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.
அந்த மனைப் பிரிவுகளின் விற்பனை நோக்கத்துக்காகவும், தனியார் நிறுவனத் தின் லாப வேட்கைக்காகவும் பழனியம்மாள் நகர் 4ஆவது வீதியில் இருபுறமும் இருக் கும் மரங்களை ஆக்கிரமிப்பு என அகற்று வதற்கு முயற்சித்து வருகின்றனர். இதற்காக அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிற பழ னியம்மாள் நகர் குடியிருப்புவாசிகளை மாந கராட்சி அதிகாரிகளைக் கொண்டு, ஆக்கிர மிப்புகள் அகற்றம் என்று நிர்பந்தித்து வருகின் றனர். எல்லா மரங்களையும் வெட்ட வேண்டும், வீட்டுக்கு வெளியே உள்ள துணி துவைக் கும் கற்களைக் கூட அகற்ற வேண்டும், வீட் டுக்குச் செல்லும் நுழைவு வாயில் சரிவு பாதையை அகற்ற வேண்டும் என்று சொல்லி தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். மரங்களை
அகற்றி அந்த சாலையை அகலமாக காட்ட வும், அதன் மூலம் உமா உதயா கார்டன் நிறுவனத்திற்கு பாதை வசதி இருப்பதாகக் காட்டி வீட்டுமனை விற்பனையை அதிகரிக் கவும், மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் நலன், சுற்றுச்சூழல் பற்றி அக்கறை இல்லாமல் தனி யார் நிறுவனத்திற்காக செயல்படுகின்றனர். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு காவல் துறையினர், பெரிய வாகனங்கள், ஜேசிபி புல்டோசர் வாகனம் , ஆம்புலன்ஸ் உள்பட சகல தயாரிப்புகளுடனும் அங்கு வந்து மக்களை மிரட்டி அராஜகப் போக்கில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதி மக் கள் தங்கள் குடியிருப்பு வீதிகளிலேயே போராட்டம் நடத்தினர். அப்போதே மாநகர மேயர் தினேஷ்குமார் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மேயர் தலையிட்டு அதிகாரிகளை அறிவுறுத்தி அவர்களது முயற்சியைக் கண்டித்து தடுத்து நிறுத்தி னார். ஆனால் மீண்டும் தற்போது அங்கிருக் கும் மரங்களை அகற்றப் போவதாக நோட் டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் பழனியம் மாள் நகர் மக்கள் தற்போது மேயரை நேரில் சந்தித்து முறையிட திரண்டு வந்தனர், என்று தெரிவித்தனர். இதையடுத்து மேயர் தினேஷ்குமார் சம் பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பழனியம்மாள் நகரில் ஆக்கிர மிப்பு அகற்றம் என நடவடிக்கை எடுப்பதை கைவிட உத்தரவிட்டார். அத்துடன் இப்பிரச் சனையில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் எழுத்துப்பூர் வமாக அந்த குடியிருப்பு மக்களுக்கு இது போன்ற செயல் நடைபெறாது என்றும் உத்தர வாதம் அளித்ததாகவும் அவர்கள் கூறினர்.