ஒட்டன்சத்திரம், ஏப்.22- ஒட்டன்சத்திரம் அருகே குண்டும் குழியுமாக மாறிய சாலையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தா.புதுக்கோட்டை ஊராட்சி ஸ்டாலின்நகரில் பிரதான சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்தி ற்கு லாயக்கற்ற வகையில் உள்ளது. இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஆனந்த் கூறு கையில், ஸ்டாலின்நகரில் உள்ள மெட்டல் சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டதால் பொதுமக்கள் நீண்ட வருடமாக அவ திப்பட்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம் உடனே தலையிட்டு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண் டும். என்று வலியுறுத்தினார்.