பழைய பென்சன் திட்டம் தொடர ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல், டிச.19- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டுமென மத்திய- மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஓய்வூதியர் தின கருத்த ரங்கிற்கு அமைப்பாளர் எஸ்.எம்.ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்தக் கருத்தரங்கில் போக்குவரத்துத் துறை யில் 80 மாத அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. என வலி யுறுத்தப்பட்டது. கருத்தரங்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.இராமமூர்த்தி, எம்.எல்.கேசவன், எஸ்.ஜேம்ஸ்கஸ்பார்ராஜா, ஏ.மருதை, ஜே.ஜோதிநாதன், எஸ்.ஜான்சன், எஸ்.அமல்ராஜ் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரசவித்த தாய்-சேய் மரணம்
விருதுநகர், டிச.19- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிர சவத்தின் போது தாய் மற்றும் குழந்தை மரணமடைந்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவர் மற்றும் செவி லியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்மென மாவட்ட ஆட்சி யரிடம் உறவினர்கள் மனு அளித்தனர். இதுகுறித்து ஆசீர்வாதம் என்பவர் தனது மனுவில், “எனது மூத்த மகள் அரங்கநாயகி. இவருக்கு ராம்குமார் என்பவரை திருமணம் செய்து வைத்தேன். இந்நிலையில், எனது மகளை கடந்த டிச.17-ஆம் தேதி பிரசவத்திற்காக வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். டிச.18-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவர் பணியில் இல்லை. பின்பு, குழந்தை தாய்ப்பால் பருகியது. ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக செவிலியர் தெரிவித்தார். பின்பு, எனது மகளின் உடல் நிலையும் மோசமானது. இதையடுத்து, 108 ஆம்பு லன்ஸ் மூலம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனது மகளை பரிசோ தித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத் தெரிவித்தார். எனவே, எனது மகள் மற்றும் அவரது குழந்தை இறப்பிற்கு காரணமான பணிக்கு வராத மருத்து வர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
குப்பையை அகற்றி பசுமைப்பூங்கா
சின்னாளபட்டி, டிச.19- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மயான சாலை யில் கடந்த பத்து ஆண்டுகளாக குப்பை மலை போல குவிக்கப்பட்டு வந்தது. அங்கிருந்த 800 டன் குப்பையை வத்தலக்குண்டு பேரூராட்சியினர் அங்கிருந்து அகற்றி னர். பின்னர் மீண்டும் யாரும் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் வகையில்அப்பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது. விழாவுக்கு திமுக ஒன்றியச் செய லாளர் கே.பி.முருகன் தலைமை வகித்தார். நிகழ்வில் திமுக நகர் செயலாளர் சின்னத்துரை, வத்தலக்குண்டு பேரூராட்சித் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமதி, சியாமளா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சகோதரி இறப்பிற்கு வந்த அக்கா நெஞ்சுவலியால் மரணம்
சின்னாளபட்டி, டிச.17- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் சவேரியார் தெருவைச் சேர்ந்தவர் அன்னமுத்து (65) இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப் பட்டு இருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை அன்னமுத்து மரணமடைந்தார். அன்னமுத்து இறந்த தகவலறிந்து வந்த சகோதரி அந்தோணியம்மாள் அன்னமுத்து உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது, அந்தோணியம்மா ளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். அந்தோணியம்மாளை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல் லும் வழியில் அக்கா அந்தோணியம்மாள் உயிரிழந்தார். சகோதரிகள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது அவ ரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
அருப்புக்கோட்டை, டிச.19- அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் தாலுகா காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோத னையிட்டனர். அதில், 44 மூடைகளில் சுமார் இரண்டு டன் ரேசன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர் மதுரையைச் சேர்ந்த ஓட்டு னர் ராமமூர்த்தி (26) என்பவரைக் கைது செய்தனர். வாக னத்தின் உரிமையாளர் மதுரை சந்தைபேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பத்வரை தேடி வருகின்றனர்.
மோடி அரசைக் கண்டித்து பிரச்சாரம்
விருதுநகர், டிச.19- விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டியில் ஒன் றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பி.பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர் கே. ஆரோக்கியராஜ், ஒன்றிய செயலாளர்ச் பி.நேரு உள்ளிட்ட பலர் பேசினர். கே.குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு
விருதுநகர், டிச.19- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், எஸ். கொடிக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான சிறுபான்மை மக்கள் உள்ளனர். இவர்கள், அரசு புறம் போக்கு நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், குடியிருக்கும் வீட்டிற்கு இலவசமாக பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதில் 27 பேருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் இலவச பட்டா வழங்கியதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள குடும்பத்தின ருக்கும் இலவச பட்டா வழங்க வலியுறுத்தி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக்ததில் கோரிக்கை மனு அளித் தனர். அப்போது. திமுக பேரூர் கழக செயலாளர் கருண ஈஸ்வரன், 10-ஆவது வார்டு கவுன்சிலர் சிராஜூதீன், சங்கரநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
போக்குவரத்து கழகங்கள் நஷ்ட பிரச்சனை: உத்தரவு பிறப்பிக்க முடியாது: “உயர்நீதிமன்றம்”
மதுரை, டிச. 19- அரசுப் போக்குவரத்துக் கழக நஷ்டம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம் மதுரையைச் சேர்ந்த ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், அரசுப் போக்குவரத்துக் கழக நஷ்டம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கவேண்டும். போக்கு வரத்து கழகங்களை நிர்வகிக்க ஐஏஎஸ் அதிகாரி களை நியமிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதி கள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் மனுதாரர் போதுமான ஆவணங்கள் மற்றும் விப ரங்களின்றி நாளிதழ்களின் செய்தியை அடிப்படை யாக வைத்து மனுத் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடி யாது. அரசுத் தரப்பில் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை பரிசீலிக்கலாம் என கூறி மனுவை முடித்து வைத்தனர்.
“பாரதியின் இருவரிக் கவிதையே தமிழின் மேன்மைக்கு சான்று
கவிஞர் அணில்குமார் பேச்சு
சின்னாளபட்டி, டிச.19- திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியா ரின் 141-ஆவது பிறந்த நாள் விழா, இந்திய மொழிகள் திருவிழா நடைபெற்றது. தமிழ்த் துறை, பாரதியார் ஆய்வ கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் (பொறுப்பு) குர்மித் சிங் தலைமை வகித்தார். கேரள சாகித்ய அகாதெமியின் விருதுபெற்ற மலை யாளக் கவிஞர் அனில்குமார், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற னர். நிகழ்ச்சியில் கவிஞர் அனில்குமார் பேசி யதாவது: நாட்டில் பல தலைசிறந்த கவிதைகள் தமிழ் மொழியில் உருவாகின. தமிழின் பெரு மையும் அதற்குப் பாரதியின் பங்களிப்பும் அளவிட முடியாதது. மகாகவி பாரதியின் இரண்டு வரிக் கவிதையைப் படித்தாலே போதும் தமிழின் மேன்மையை அறிந்து கொள்ளலாம் என்றார் அவர். விழாவுக்கு பேராசிரியர்கள் முத்தையா, மொகல் சலீம் பெய்க், ஷாஜி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சாகித்ய அகா தெமி விருதாளரும், பாரதியார் ஆய்வக ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். விழாவையொட்டி, நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, பன்மொழிப் புலமைப் போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலைக் கழ கப் பதிவாளர் சிவகுமார் பரிசு, சான்றி தழ்களை வழங்கினார். தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரி யர் முனைவர் சி.சிதம்பரம் நன்றி கூறி னார்.
மீன்வளத்துறையைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
இராமேஸ்வரம், டிச.19- இராமேஸ்வரத்தில் அனுமதி பெறாத படகுகள் மீன்பிடிப்பதில் மீன்வளம் மற் றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் ஒரு தலைபட்டசமான நடவடிக்கை எடுக்கா ததை கண்டித்து மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை டோக்கன் வழங்கும் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்தில் 630 விசைப்படகுகள் பதிவில் உள் ளது. இந்த நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி இன்றி 18 விசைப்படகுகள் கடந்த 12 மாதங்களுக்கு மேலாக சட்ட விரோதமாக மீன்பிடித் தொழி லில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து பல முறை மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரி களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த படகுகள் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீண்டும் அனுமதி இல்லாத நான்கு விசைபடகுகள் வந்துள் ளது. இதில், ஒரு விசைப்படகு மட்டும் மீன்பிடிக்கச் சென்றுள்ளது. இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதி காரிகள் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடங்க ளுக்கு மேலாக 18 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றுவரும் நிலையில் அந்தப் படகுகளை பிடிக்காமல் தற்போது வந் துள்ள இந்தப் படகை மட்டும் உள்நோக் கத்துடன் பிடித்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைகையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தேனி, டிச.19- வைகை அணையில் தண்ணீர் திறப்பு 1419 கன அடி யாக அதிகரிக்கப்பட்டது . பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது . மொத்த கொள்ளளவான 71 அடியில் தற்போது 67.03 அடி நீர்மட்டம் உள்ளது. அணையின் பாது காப்புக் கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்த தால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு சிறிய மதகுகள் வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலை யில் திங்களன்று நீர் திறப்பு 1419 கன அடியாக உயர்த்தப் பட்டது. மேலும் 250 கன அடி நீர் ஒவ்வொரு மதகுகள் வழி யாக வெளியேற்றப்பட்டது. அணைக்கு 1025 கன அடி நீர் வருகிறது. பெரிய மதகுகளில் திறக்கப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் ஆர்ப்பரித்துச் சென்றது. தரைப் பாலத்தை ஒட்டி தண்ணீர் சென்றதால் சுற்றுலாப் பயணி கள் உற்சாகம் அடைந்தனர்.
பழனி கோவில் வருமானம் ரூ.19 கோடி
பழனி, டிச.19- பழனி முருகன் கார்த்திகை மாதத்தில் மட்டும் பல்வேறு இனங்களின் மூலம் சுமார் ரூ.19 கோடிக்கு மேல் வரவு கிடைத்ததாக கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு கார்த்திகை மாதத்தில் மட்டும் (நவ.17 முதல் டிச.15 வரை) பத்து லட்சத்து 84 ஆயிரத்து 242 பக்தர்கள் சுவாமி தரி சனம் செய்தனர். கம்பி வட ஊர்தியைப் பயன்படுத்தி 1,07,678 பக்தர்களும், மின் இழுவை ரயிலைப் பயன்படுத்தி 1,72,956 பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய மலைக் கோவிலுக்குச் சென்றனர். மலைக்கோவிலில் நடை பெறும் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தில் 1,48,549 பக்தர்கள் உணவருந்தினர். மலைக் கோவிலில் வழங்கப்படும் விலையில்லா பஞ்சாமிர்த பிரசாதத்தை 3,97,125 பக்தர்கள் பெற்றனர். படிப்பாதை மற்றும் யானைப் பாதையில் கோயில் மூலம் இலவச நீர் மோர், சுக்கு காபியை 1,37,500 பக்தர்கள் அருந்தினர். கோவில் பிரதானமான அபிஷேக பஞ்சா மிர்த பிரசாதம் விற்பனை மூலம் ரூ.8,58,03,710 வருமானம் கிடைக்கப் பெற்றது. கோவில் சார்பில் விற்பனை செய்யப் படும் லட்டு, முறுக்கு, அதிரசம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் விற்பனை மூலம் ரூ.70,03,485 வருமானம் கிடைக்கப் பெற்றது. தவிர, உண்டியல் திறப்பு மூலம் ரூ.3,75,00,000 வருமானம் கிடைக்கப் பெற்றது. கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த வகையில் உண்டியல், பஞ்சாமிர்த பிர சாதம் விற்பனை, பிரசாதம் விற்பனை, தங்க ரதம், தங்கத் தொட்டில், தரிசனக் கட்டணச் சீட்டு விற்பனை, இதர சேவைக் கட்டணங்கள் மூலம் கோவிலுக்கு மொத்த வரு மானம் ரூ.19,24,00,000 கிடைத்தது எனத் தெரிவிக்கப் பட்டது.
சாராய ஊறல்; ஒருவர் கைது
தேனி, டிச.19- கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த 25 லிட்டர் சாராய ஊற லுடன் ஒருவரை கேரள கலால் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். குமுளி பத்துமுறி பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்சுவதாக வண்டிப்பெரியார் கலால் ஆய்வாளர் ராஜேஷ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையில், போதைத் தடுப்பு அலுவ லர்கள் பென்னி ஜோசப், ராஜ்குமார், சேவியர், அலுவ லர்கள் அனிஷ், தீபுகுமார், பிரமோத்குமார், ஸ்ரீதேவி அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது குமுளி பத்துமுறி பகுதியைச்சேர்ந்த அந்தோனி (46) என்பவர் அவரது வீட்டில் சாராயம் காய்ச்சு வதற்கு ஒளித்து வைத்திருந்த 25 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை பீருமேடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கடத்தல்: இருவர் கைது
தேனி , டிச. 19- தேவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டிச்செல்வி தலை மையில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தேவாரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே வாகன சோதனையின் போது இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த மூன்று பேரில் ஒருவர் தப்பி ஓடவே மற்ற இருவரை பிடித்து விசாரணை செய்தனர். இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல் தரவே அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் அதில் ஏழு கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுகுறித்த விசாரணையில் மூன்று பேரும் தேவாரம் மின்வாரிய தெருவைச் சேர்ந்த பாண்டிசெல்வன் (35), தேவா ரம் சர்ச் தெருவைச் சேர்ந்த ராஜூ (24), தேவாரம் நாடார் வடக்குத் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (29) என்பதும், இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்க முயன்றதும் தெரிந்தது. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பாண்டிசெல்வனை தேடி வருகின்றனர்.
மோடியின் ஜல்ஜீவன் திட்டம் மக்கள் அதிருப்தி; மறியல்
இராஜபாளையம், டிச.20 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்க புரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் போதுமான அளவு குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடி கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்க மக்கள் அளித்த முன்வைப்புத் தொகை ரூ.1,800-க்கு ரசீது வழங்கவேண்டும். ஏற்கெனவே ரூ.5 ஆயிரம் வரை பணம் கட்டிய மக்களுக்கு பல மாதங்களாகியும் இது வரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறி எஸ்.ராமலிங்கபுரம் மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு மறியலை கைவிடச் செய்தனர். இதனால் சமுசிகாபுரம-முதுகுடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத தடுப்பணை: வீணாகும் தண்ணீர்
கடமலைகுண்டு, டிச.19- தேனி மாவட்டம் வருஷநாடு அருகே மொட்டைபாறை மலை அடிவாரத்தில் மூல வைகை ஆற்றில் 15 ஆண்டு களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணை கட்டப்பட்ட பின்பு வருஷநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்தது. கோடை காலங்களில் கூட வருஷநாடு அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியதுடன் விவசாயமும் செழித்துக் காணப்பட்டது. தடுப்பணையை முறையாக பராமரிக்காததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரண மாக தடுப்பணை சேதமடைந்தது.அடுத்தடுத்து மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது. தடுப்பணை உடைந்த தால் மண்ணரிப்பு ஏற்பட்டு கரை ஓரங்களில் உள்ள தென்னை மரங்கள் கீழே சாய்ந்து வருகின்றனன. தடுப்பணையை விரை வாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறை வேற்றியும் பயனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மொட்டைபாறை அருகே புதிய தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை புறநகரில் வாலிபர் சங்க உறுப்பினர் பதிவு தீவிரம்
மதுரை, டிச.19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டப் சிறப்புப் திருப்பரங்குன்றத்தில் மாவட்டத் தலை வர் பி.தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. அவனியா புரம் பகுதிச் செயலாளர் கருப்புசாமி வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் பேசினார், மாநிலச் செய லாளர் சிங்காரவேலன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரவையில் மாவட்டத் தலைவராக வி.கருப்ப சாமி, மாவட்டச் செயலாளராக பி.தமிழரசன் மாவட்டப் பொரு ளாளராக எஸ்.பாலகிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை புறநகர் மாவட்டத்தில் இது வரை 16,600 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். உறுப்பினர் பதிவை மேலும் தீவிரப்பபடுத்த இப்பேரவை யில் முடிவு செய்யப்பட்டது.
“விருதுநகர்“ மாவட்ட குறைதீர்ப்பு மற்றும் தகவல், சான்றிதழ்கள் பெற வாட்ஸ் அப் எண் அறிமுகம்
விருதுநகர், டிச.19- பொது மக்கள் 9488400438 என்ற வாட்ஸ் அப் எண்ணை தங்களது கைப்பேசி யில் இணைத்து அரசின் திட்டங்கள், சான்றி தழ்கள் பெறும் விபரம், வாக்காளர் பட்டி யலில் தங்களது பெயர் இடம் பெற்ற வாக் குச்சாவடி மற்றும் அரசின் முக்கிய அறி விப்புகள் ஆகியவற்றை எளிதில் அறிந்து கொள்ள முடியும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து திங்களன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: 9488400438 என்ற வாட்ஸ் அப் எண்ணை தங்களது மொபைலில் இணைத்து உடன் தமிழில் தகவலைப் பெற எண்1, ஆங்கி லத்தில் தகவலைப் பெற எண் 2 ஐ அழுத்த வேண்டும். பின்பு, அதில் ஏ முதல் எல் வரை வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பி தங்க ளுக்குத் தேவையான தகவல்களை பெற முடியும்.
ஏ என்ற எழுத்தை அனுப்பினால், சிறப்புக் கல்விக் கடன் முகாம் பற்றியும், பி என்றால் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையில் இணைக்கவும், சி என்றால் வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேடவும், டி என்றால் புதிய வாக்காளராக பதிவு செய்தல், நீக்கல், இடம் மாற்றம், திருத்தம், நகல் வாக்காளர் அட்டை பெறுதல், மாற்றுத் திறனாளி என பதிவு செய்தல் போன்ற இணையதள முகவரிகள் கிடைக்கும். இ என்றால் மின்னணு வாக்காளர் அட்டை யை பதிவு செய்யும் முறை, எப் என்றால் வாக்குச்சாவடி அமைவிடம், ஜி.என்றால் முதல்வரின் தனிப்பிரிவு முகவரி, எச் என்றால் நிலவுடைமை ஆவணங்கள், பட்டா, சிட்டா, அ.பதிவேடு மற்றும் புலப் படம் போன்றவைகளை பெறும் விபரமும் கிடைக்கும். ஐ எனில் இணையவழி மூலம் கிடைக்கும் சான்றிதழ் சேவை பற்றிய விபரங்களும், ஜெ என்றால் முக்கிய உதவி எண்களையும், கே.என்றால் அரசின் அறி விப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். எல் என்றால் அரசுத் துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முக வரிகளையும் பெறலாம் என்றார். மேலும் அவர் கூறுகையில் இந்தியா விலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் முதன் முறையாக வாட்ஸ் அப் மூலம் இது போன்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட எண்ணை இணைத்து பயன் பெற வேண்டும் என்றார்.
திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
மதுரை, டிச.19- அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்ப டையில் வேங்கடசமுத்திரம் கிராமத்தில் திருமங்கலம் நகராட்சிக்கான புதிய பேருந்து நிலையத்தை கட்டக் கோரும் வழக்கில் நகராட்சி நிர்வாக செயலர் மற்றும் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதி லளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கணே சன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “திருமங்கலம் நகராட்சியில் நகர்ப் பகுதியில் ஒரு ஏக்கர் 33 சென்ட் பரப்ப ளவில் 37 ஆண்டுகளுக்கு முன்பாக திரு மங்கலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மக்கள் தொகையும் வாகனங்களும் அதி கரித்த நிலையில் வேங்கட சமுத்திரம் கிரா மத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு சுமார் 22.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அர சாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தற்போது வேங்கடசமுத்தி ரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டு வதற்குப் பதிலாக திருமங்கலம் நகர்ப் பகுதி யில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை இடித்து மீண்டும் கட்ட முயற்சி எடுக்கப் பட்டு வருகிறது. எனவே, திருமங்கலம் நக ராட்சி பேருந்து நிலையத்தை இடிக்கவும் மறு கட்டமைப்பு செய்யவும் இடைக்காலத் தடை விதித்து அரசு பிறப்பித்த அரசாணை யின் அடிப்படையில் வேங்கட சமுத்திரம் கிராமத்தில் திருமங்கலம் நகராட்சிக்கான புதிய பேருந்து நிலையத்தை கட்ட உத்தர விட வேண்டும்.” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு வழக்கு தொடர்பாக நகராட்சி நிர்வா கச் செயலர் மற்றும் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.