districts

img

நிம்மதியைத் தொலைத்த குழாய் அமைக்கும் பணி தினந்தோறும் அவஸ்தை.... எப்போது தான் தீர்வு?

மதுரை, பிப்.27- மதுரை மாநகராட்சியின் விரி வாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி இன்  னும் முடிந்தபாடில்லை. மக்களின் தேவைக்கு அடிப்படை வசதி களைச் செய்து கொடுப்பது அவசி யம். அதே நேரத்தில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது. பாதாளச் சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படவில்லை. குண்டும்-குழி யுமான சாலைகள், அதிலிருந்து வெளியாகும் தூசிகளால் மக்கள் படும் துயரத்திற்கு எல்லை இல்லை. ரயிலார்நகர் மட்டுமல்ல அதற்கு எதிர்புறமுள்ள சாந்திநகரி லிருந்து ராஜ் நகர் வழியாக கரிசல் குளத்திற்குச் செல்லும் சாலை மோசமாக உள்ளது. அஞ்சல் நகர் குறுக்குத் தெரு (கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சாலை), இந்  தியன் வங்கியிலிருந்து புஷ்பம் மஹால் செல்லும் பிரதான சாலை,  சொக்கலிங்க நகரில் சில சாலை கள் இன்னும் சீரமைக்கப்பட வில்லை.
நட்டு வைத்த பேரிகார்டுகள் அகற்றம்
தவிர, கூடல்நகர் பாலத்தைக் கடந்தவுடன் துவங்கும் ரயிலார் நகரிலிருந்து ஆனையூர் வானொலி  நிலையம் வரை அமைக்கப்பட்டி ருந்த சாலைத் தடுப்புகள் அகற்  றப்பட்டுவிட்டன. இந்தச் சாலை யின் இருபுறமும் பாதாளச் சாக் கடை பணிகள் நடைபெற்றது. இந்த பிரதான சாலை இன்றுவரை புதுப் பிக்கப்படவில்லை. இதனால் காலை-மாலை நேரங்களில் கடும்  போக்குவரத்து நெருக்கடி ஏற்படு கிறது.
வேகத்தடை மாயமாகி ஒன்றரை ஆண்டுகள்
தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த போது அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டைப் பார்வையிடுவதற்காக இந்தச் சாலையின் வழியாகத்தான் சென்றார். அப்போது, பள்ளிகள் முன்பு அகற்றப்பட்டிருந்த வேகத்  தடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. ஒன்றரை ஆண்டுகளாகியும் அகற் றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் கூடல்நகர் பேருந்து நிறுத்தம், ஆனையூர் பிரிவுச்சாலை, கூடல்  நகர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, தினமணி நகர் அருகே  உள்ள பள்ளி ஆகிய இடங்களில்  மாணவ-மாணவிகள் சாலை களைக் கடப்பதற்குப் படும் அவஸ்தையை எழுத்துகளில் எழுதமுடியாது. அஞ்சல் நகரைச் சேர்ந்த எஸ்.சுந்தரி கூறுகையில், குழாய்கள் பதிப்பதற்காகச் சாலைகள் பல முறை தோண்டப்பட்டது. 15 நாட்க ளுக்கு முன் குடிநீர் குழாய் சேத மடைந்தது. அதிகாரிகள் இன்னும் சரி செய்யவில்லை, நாங்கள் போர்  வெல் தண்ணீரை மட்டுமே நம்பி யுள்ளோம். தனியார் தண்ணீர் லாரி கள் சேறும் சகதியுமான சாலை களில் சிக்கிக் கொள்ளும் என்பதால் உள்ளே வரத் தயங்குகின்றன” என்  றார். பால் வியாபாரி வி. ராஜ்குமார் கூறுகையில், வாடிக்கையாளர் களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் வழங்குகிறேன். குண்டும்-குழியுமான சாலைகளில் சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது என் றார். பெரியார் நகரில் வசிக்கும் எஸ். ஆனந்த் கூறுகையில், குழாய் பதிக்கும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகிறது. இருப்பினும் பணி முடிவடையவில்லை என்றார். ரயிலார் நகர், அஞ்சல் நகர் பகுதி மக்கள் படும் துயரங்களை மாநகராட்சி ஆணையர் நேரில் வந்து பார்ப்பது உதவியாக இருக்  கும்.