இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கூரை அமைப்பதற்கான இடத்தினை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.