சிவகங்கை,ஏப்.21- சிவகங்கை நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று சிவகங்கை நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சிவகங்கை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் முன்னிலையில் நடந்தது . நகர மன்ற ஆணையாளர் பொறுப்பு பொறியாளர் பாண்டிஸ்வரி, நகர மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக கூட்ட முடிவில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க சிவகங்கை வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது .சிவகங்கை நகரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சண்முகராஜா கலையரங்கம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை நகரத்தில் ஊரணிகள் ஏராளமாக உள்ளன. இந்த ஊரணிகள் அனைத்தையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .தற்போது செக்கடிஊரணி ஒரு கோடியில் ,செட்டி ஊரணி ஒரு கோடியில் ,சாவக் ஊரணி 30 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் நான்கு ஊரணிகளுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு இருக்கிறது .நூலகம் ரூ2 கோடியில் கட்டப்பட்டு வருகிறது .நகராட்சி நிர்வாகம் சார்பாக எல் ஐ சி அலுவலகம் அருகே மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. வாரச்சந்தை வளாகத்தில் மூணே முக்கால் கோடி செலவில் 500 கடைகள் கட்டப்பட்டு வருகிறது .கல்லூரி சாலைக்கு மன்னர் கல்லூரி பேராசிரியர் எழுத்தாளர் கவிஞர் மீரா அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சிவகங்கை நகரத்தில் இருக்கக்கூடிய தமிழ் புலவர் இளங்கோ அய்யா அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவகங்கை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.