districts

img

பட்டியல் சாதி குழந்தைகளுக்கு தின்பண்டம் அனுப்பிய சமூக ஆர்வலர்கள்

மதுரை, செப்.19-  தென்காசி மாவட்டம், சங்க ரன்கோவில் தாலுகா பெரு மாத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பாஞ்சாங்குளம் ஆதிதிராவி டர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தை களுக்கு ஊர்க்கட்டுப்பாடு என்ற  பெயரில் தின்பண்டம் வழங்க  மறுத்த கடைக்காரர் மகேஷ்வரன் தற்போது சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்தநிலையில் பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமையைக் கடைப்பிடித்தது குற்றம். அது ஒரு பாவச் செயல் என்பதை பாஞ்சாங் ்குளத்திற்கு மட்டுமல்ல தமிழ கத்திற்கே பறைசாற்றும் வகை யில் பாஞ்சாங்குளம் ஆதிதிராவி டர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு மதுரையில் பல சமூக மக்கள் நடத்தும் கடை களில் இருந்து முறுக்கு, மிக்சர், அல்வா, லட்டு, மக்ரூன்‌  என சுமார் ஐந்து கிலோ தின்பண்டங்களை வாங்கி பதிவஞ்சல் மூலம் திங்க ளன்று பாஞ்சாங்குளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அலுவல கம் அருகே நடைபெற்ற நிகழ்வில் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்ட ளை நிர்வாகிகள் ஹக்கிம், சங்கரபாண்டி, நாகேஸ்வரன், பாலா, சதாம் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பொருட்களை சவரியார்-பொன்னுத்தாய் ஆகியோரது மகன்  பிரவீன் (10) முகவரிக்கு அனுப்பி வைத்தார்கள். பிரவீன் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார்.