திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் குட்டத்துப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்கான பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி துவக்கி வைத்து. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சிவகுருசாமி, குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்கனி ஹரிசந்திரன், துணைத் தலைவர் விசுவாசம் அருளப்பன், ஊராட்சி செயலர் பிலவேந்திர ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.