districts

img

ஏப்.17 இல் வன விவசாயிகளை சந்திக்கிறார் பெ.சண்முகம்

கடமலைக்குண்டு, ஏப்.11- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் வசித்து வரும் அர சரடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக்கிராம வன விவசாயிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கடந்த மாதம் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர். இதுதொடர்பாக ஞாயிறன்று வருசநாடு கிராமத்தில் வன விவசாயிகள் ஆலோசனை நடைபெற்றது.  கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு வருகை தந்து  அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட மலை  கிராமங்களுக்கு சென்று வன விவசாயி களை சந்திக்கவுள்ளது குறித்தும், மலைக் கிராமங்களில் வன விவசாயிகளை ஒருங்கி ணைப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.  மேலும் வன விவசாயிகள் வனப்பகு தியில் இருந்து வெளியேற்றப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட  ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோ சனை மேற்கொள்ளப்பட்டது.