திருநெல்வேலி, ஏப் 24- நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலத்திற்கு ஓவியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நாதஸ்வர கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலம் நூற்றாண்டு விழாவையொட்டி நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஓவியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மகாராஜாநகரை சேர்ந்த மாணவி பிரஷிதா என்பவர் காருக்குறிச்சி அருணாசலத்தின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்தார். சுமார் 500 அடி நீள கதர் துணியில் காருக்குறிச்சி அருணாசலத்தின் உருவப்படத்தை சுமார் 2 மணி நேரத்தில் மாணவி வரைந்து முடித்தார்.இதற்காக அவர் ஒரு மாத காலம் பயிற்சி எடுத்துள்ளார். அருங்காட்சியகத்தின் திறந்தவெளி கலையரங்கத்தில் அவர் வரைந்த அந்த ஓவியத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பார்வையிட்டு மாணவியை பாராட்டினார்.நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்தியவள்ளி, கலை, பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.