சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு ஒன்றிய செயலாளர் தென்னரசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருமாறன் நன்றி கூறினார்.