நாகர்கோவில், டிச.26- மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளைத் திறந்துபயணம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை யில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் (டராட்டக்) மாநி லக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் டிச-26 அன்று நாகர்கோவிலில் மாநில தலைவர் பா. ஜான்ஸிராணி தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, செயலாளர்கள் வில் சன், ஜீவா உள்ளிட்ட மாநில நிர்வாகி கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட் டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: கூட்ட நெரிசல்களில் பயணிக்க முடியாது என்பதாலும், இரயில் பயணங்களில் சமவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையிலும் நீதி மன்ற தீர்ப்பினால் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு பெட்டிகள் உரு வாக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக ஓரளவு நிம் மதியுடன் மாற்றுத்திறனாளிகள் பய ணம் செய்து வந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டது.
தற்போது சகஜ நிலை பெருமளவு திரும்பி, இரயில் போக்குவரத்தும் சகஜமாகி உள்ளன. எனினும், இரயில் களில் இருபுறமும் இணைக்கப்பட் டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணம் செய்ய இரயில்வே நிர்வாகம் கடந்த சுமார் ஒன்னே முக்கால் ஆண்டாக மறுத்து வருகிறது. இது மாற்றுத்திறனாளிகள் சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு களுக்கு விரோதமானது. மாற்றுத்திற னாளிகளுக்கு பயணம் செய்யும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆனால், இரயில்வே ஊழியர்கள், காவல்துறை மற்றும் அவர்களுக்கு வேண்டியவர் கள் பயணம் செய்ய மட்டும் கள்ளத் தனமாக அனுமதித்து வருவது வெட்கக் கேடானது. கண்டிக்கத்தக்கது. எனவே, அனைத்து இரயில்களி லும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளை திறந்து பயணம் செய்ய உடனடியாக அனுமதிக்க வேண்டும். அதற்குரிய சலுகை கட் டண பயணச்சீட்டுகளை அனைத்து இரயில் நிலையங்களிலும் வழங்க உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கை யை வலியுறுத்தி, தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவ லகத்தை முற்றுகையிட்டுப் போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. ஜன-10 திங்கட்கிழமை இப் போராட்டத்தை நடத்திட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க மாநிலக்குழு தீர்மா னித்துள்ளது.
மருத்துவ சான்றளிப்பதில் அலைக்கழிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் 2 மாதங்க ளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் உடனடியாக துவக்கி நடத்தப்பட வேண்டும். அதைப்போன்று நாகர்கோவில், பத்மநாபபுரம் கோட்டாட்சியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்டங்களும் முறையாக நடத்த வேண்டும். ஆசாரி பள்ளம் மருத்துவக் கல்லூரியில் ஊனத்திற்கான சான்று, ரயில்-பேருந்து பயண சலுகைக்கான சான்றுகள் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக் கப்படுகிறார்கள். உரிய வழிகாட்டு தல்களை மருத்துவர்கள் பின்பற்றுவ தில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர் கிறது. வாரம்தோறும் நடக்கும் சான்ற ளிப்பு முகாமுக்கு வரும் மருத்துவர் களுக்கான ஊக்கத்தொகை மற்றும் செலவினங்களை மாற்றுத்திறனாளி கள் நலத்துறை வழங்கும் நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் நேரடி கண்காணிப்பில் அவரது அலுவலகத்தில் நடத்துமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநி லக்குழுக் கூட்டத்தின் வாயிலாக வலி யுறுத்தப்படுகிறது.