districts

img

இராமேஸ்வரத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை திறந்திடுக!

இராமநாதபுரம், மார்ச் 18- இராமேஸ்வரம் 9 ஆவது  வார்டு சிவகாமி நகர், வெண்  மணி நகர் ஆகிய பகுதி மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கை யை ஏற்று புதிய ரேசன் கடை  கட்டி முடிக்கப்பட்டு கடந்த  ஆறு மாதங்களாக திறக்கப் படாமல் உள்ளது.  புதிய ரேசன் கடையை திறந்து பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வட்டாட்சி யரிடம்  மனு கொடுக்கப் பட்டது . இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. கருணாகரன்,தாலுகா செய லாளர் ஜி.சிவா, மாவட் டக்குழு உறுப்பினர் இ.ஜஸ் டின் மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள், பகுதி பொது மக்கள் கலந்து கொண்ட னர்.