இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தினைக்குளம் ஊராட்சியில் மார்ச் 21 அன்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். தினைக்குளம் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.