நாகர்கோவில், நவ.15- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 3 சதவிகித அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர் உட்பட அனைவருக்கும் வழங்கவும் ஒப்பந்த ஊழியருக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்கவும் தொகுப்பூதிய ஊழிய ருக்கு பின்பாக்கி ஊதியம் வழங்க வும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஒரு நாள் வேலை விடுப்பு எடுத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெ. எஸ். மேரிதாசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் சந்திர போஸ், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உதயன், ஸ்ரீ குமாரன் நாயர் உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளான குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.