இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நகரத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். வைமா கல்வி குழும தலைவர் வைமா திருப்பதி செல்வன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயபாரத், முன்னாள் மாவட்டச் செயலாளர் மாரியப்பன், நகரச் செயலாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.