தேனி, மே 11- ஆண்டிபட்டி தாலுகா ஏத்தக்கோவிலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் அழகர் காலமானார். தேனி மாவட்டம், ஆண்டி பட்டி தாலுகா ஏத்தக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரு மான அழகர் (வயது 97) புதன்கிழமையன்று மாலை காலமானார் . 50 ஆண்டுகளுக்கும் மேல் கட்சி உறுப்பினராக இருந்தவர். வனத்துறை யினரை கண்டித்தும் .மக்க ளுக்கான பல்வேறு போராட் டங்களுக்கு தலைமை வகித்து முன்னணி தலைவராக விளங்கினார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று மாலையில் ஏத்தக்கோவி லில் நடைபெற்றது .கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மா. தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கே. தயாளன். விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எல். ஆர்.சங்கர சுப்பு,மற்றும் பி. ராமன்,எஸ். அய்யர், ஜெய ராமன் உள்ளிட்டோர் அன்னா ரது உடலுக்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவுக்கு விவ சாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலை வர் ஏ.லாசர் இரங்கல் தெரி வித்துள்ளார்.