ஒடிசா ரயில் விபத்தில் பலியான அப்பாவி பொது மக்களுக்கு விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கே.முருகன் இரங்கல் உரையாற்றினார். மேலும் இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.