districts

img

ரயில்பாதை மின்மயமாக்கல்: மதுரை - போடி வழித்தடத்தில் சிறப்பு ரயில் மூலம் அதிகாரிகள் ஆய்வு

தேனி.மே 16- மதுரை-போடி வழித்தடத்தை மின் மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கி யுள்ளன. இதற்காக சிறப்பு ரயில் மூலம்  மே 16 செவ்வாய்க்கிழமையன்று ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. இதற்காக ரூ.93 கோடி மதிப்பில் ஒப்பந்தம் மூலம் இப்பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை தண்டவாளங்களின் அருகில் மின்கம்பங்கள் நடுவதற்கான முதற்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன.  அதிவேக சுய உந்துவிசை இன்ஜின் உள்ள ஆய்வு ரயில் மதுரையில் இருந்து இயக்கப்பட்டது. துணை முதன்மை பொறியாளர் ரோகன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடு பட்டனர். ரயில் இயக்கத்திற்கான தடையற்ற மின்விநியோகத்திற்காக தேனியில் துணை மின்நிலையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மின்மயமாக்கலுக்கான ஆய்வு அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு சமர்பிக்கப்பட்டு முழுவீச்சில் பணிகள் தொடங்கும். ஓராண்டுக்குள் இப்பணி முடியும் என்று தெரிவித்தனர. தேனியில் இருந்து போடி வரை அனை த்து தொழில்நுட்ப, சமிக்ஞை பணிகள் முடி வடைந்து பல மாதமாகியும் போடிக்கு இது வரை ரயில் இயக்காதது தேனி மாவட்ட மக்க ளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.