தேனி, ஜன.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினரின் போராட்டத்தால் சின்ன மனூரில் டாஸ்மாக் மதுக்கடை யை இடமாற்ற அதிகாரிகள் உறுதி யளித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூ ரில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய நகரின் மையப்பகுதியில் எள்ளுகாட்டு தெருவில் எண் 8547 டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. பொது மக்களுக்கு இடையூறான இந்த மதுபானக் கடையை இடமாற்றக் கோரி ஜனவரி 18 புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இந்த சாலை மறியலில் ஈடு பட்ட பாலபாரதியையும் போலீ சார் கைது செய்து தனியார் திரு மண மண்டபத்தில் அடைத்தனர். மதுக்கடையை இடமாற்றும் வரை போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். கட்சியினர் அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபம் முன்பும் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் இளங்கோ வன், போடி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் கே.பாலபாரதி மற்றும் கட்சித்தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்தனர்.