districts

புத்தகத் திருவிழா என்ற பெயரில் விருதுநகரில் அதிகாரிகள் வசூல் வேட்டை

விருதுநகர், நவ.16- விருதுநகரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு லட்சக் கணக்கான ரூபாய் வசூல் செய்து தர வேண்டுமென அலுவலர்  களுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்ற னர். விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறை யாக அரசு சார்பில் புத்தகத் திருவிழா வரும்  நவம்பர் 17 முதல் 27 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக, தமிழக  அரசு ரூ.12 லட்சம் வரை ஒதுக்கீடு செய்துள்  ளது. இதையடுத்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இந்த  புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் 100க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை செய்யப்படும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், புத்தகத் திருவிழா ஏற்பாட்டிற்கு அரசு வழங்கும் தொகை போதாது. குறைந்தபட்சம் சுமார் ரூ. 1கோடி வரை தேவைப்படும். எனவே, தனி யார் நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களால் முடிந்த நிதியை நன்கொடை தர லாம் எனவும், அந்த கணக்கு எண்ணையும்,  மாவட்ட ஆட்சியர் பத்திரிகைகள் வாயி லாக தெரிவித்தார். இதையடுத்து, சில தனியார் நிறுவ னங்கள் மற்றும் தன்னார்வலர்கள் புத்தகத் திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சியர் அறி வித்த வங்கிக் கணக்கில் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பை பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தங்க ளுக்கு சாதகமாக மாற்றத் தொடங்கியுள்ள னர்.

அதாவது, தங்களுக்கு கீழ் பணிபுரி யும் அலுவலர்களுக்கு ரூ.10 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்து தர வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளனர். இதனால், நேர்மையாக பணிபுரிந்து வரும் அலுவ லர்கள் பெரிதும் மன வேதனை அடைந்  துள்ளனர். தாங்கள் யாரிடம் போய் அவ்வ ளவு பெரிய தொகையை வசூல் செய்ய முடி யும் என புலம்பி வருகின்றனர். இந்தநிலையில், பல அலுவலர்கள், தங்களுக்கு தெரிந்த வியாபாரிகள் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நாடி யுள்ளனர். அந்த அமைப்புகளின் நிர்வாகி களோ, அனைத்துத்துறையைச் சேர்ந்த அலுவலர்களும் ஒரே நேரத்தில் வந்து புத்தகத் திருவிழாவிற்காக நன்கொடை கேட்டால் நாங்கள் எங்கே செல்வது என  கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், வசூல் செய்யச் சென்ற பல அலுவலர்கள் செய்வத றியாது திகைத்துப் போயுள்ளனர். ஆனால், உயர் அதிகாரிகளோ, அலுவ லர்களை விடுவதாக இல்லை. எங்காவது சென்று வசூல் செய்து கொடுங்கள் என  தாறுமாறாக பேசுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. எனவே, தமிழக அரசு,பிற மாவட்டங்க ளில் நடைபெறும் புத்தகத் திருவிழாவின் செலவுக்கான முழுத் தொகையையும் வழங்கிட வேண்டும் என பல்வேறு அரசுத்  துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.