districts

வாழ்வாதாரத்திற்கு முறையான நடவடிக்கை எடுக்க மலைக்கிராம மக்கள் வலியுறுத்தல்

கடமலைக்குண்டு, மார்ச் 29-  தேனி மாவட்டம், கடமலை-மயிலை  ஒன்றியத்தில் ஏராளமான ஏக்கர் நிலப் பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அர சரடி, இந்திரா நகர், பொம்மராஜபுரம் உள் ளிட்ட ஏராளமான மலைக்கிராமங்கள் உள்  ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மலைக்கிராம பொதுமக்களை வனப்பகுதி யில் இருந்து வெளியேற்ற உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தர விட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து மலைக்கிராம பொதுமக்களை வனப்பகுதி யில் இருந்து வெளியேற்ற வனத்துறை யினர் தொடர்ந்து பல்வேறு கட்ட நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மலைக்கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபட வனத்துறையினர் தடை விதித்தனர்.  இதேபோல மலைக்கிராம பொதுமக் களை வெளியேற்றி அவர்கள் வசிப்ப தற்காக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே 312 புதிய வீடுகள் கட்டி முடிக்  கப்பட்டன. இதில் அரசரடி, பொம்பராஜ புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 24 பேர் மட்டுமே குடும்பத்துடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறி புதிய வீடுகளில் குடி யேறியுள்ளனர்.

மற்ற மலைக்கிராம பொது மக்கள் வனப்பகுதியில் இருந்து வெளி யேற தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரு கின்றனர்.  இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை யன்று மதுரை கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியா ளர் கதிரேசன், சமுதாய அலுவலர் சலேத்  மேரி மற்றும் வனத்துறை அலுவலர்கள் இந்திரா நகர் மஞ்சனூத்து உள்ளிட்ட மலை  கிராமங்களுக்கு சென்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி புதிய வீடுகளில் குடி யேறுமாறு மலைக் கிராம பொதுமக்களை அறிவுறுத்தினர். அப்போது மூன்று தலை முறைகளுக்கு மேலாக வனப்பகுதியில் தங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக வும், விவசாயத்தை தவிர்த்து மற்ற வேலை களில் எந்த அனுபவம் இல்லாததால் வனப்  பகுதியில் இருந்து புதிய வீடுகளில் குடி யேறினால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படையும். எனவே மலைக்கிராம மக்க ளின் வாழ்வாதாரத்திற்கு முறையான நட வடிக்கை எடுத்தால் மட்டுமே வனப்பகுதி யில் இருந்து வெளியேற முடியும் என பொது மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து மலைக்கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு தெரி யப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். வனப்பகுதியில் வசிக்கும் மலைக் கிராம மக்களுக்கு பட்டா வழங்கி, அவர் களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட் டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை வலி யுறுத்தியுள்ளார்.