districts

மதுரை முக்கிய செய்திகள்

விலை வீழ்ச்சி: ரூ.10-க்கு  7 முதல் எட்டு மீன்கள்

திருநெல்வேலி நவ 18- கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திசையன் விளை மார்க்கெட்டில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்தது. ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள்  மாலை அணிந்து வியாழக்கிழமை விரதத்தை தொடங்கி யுள்ளனா். இதனால் எப்போதும் கூட்டம் அலைமோதும் திசையன்விளை மீன் மார்க்கெட் தற்போது கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மீன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  வழக்கமாக சாளை ரக மீன் ரூ.10-க்கு 7 முதல் 8 வரை விற்பனை செய்யப்படும்.  ரூ.10-க்கு 25 சாளை மீன்கள் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற ரக மீன்களும் வழக்கத்தைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

பச்சை நிறமாக மாறிய கடல்: இராசயனக் கழிவுகள் காரணம்?

 குளச்சல், நவ.18- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் மணவாளக்குறி வரையிலான அரபிக்கடல் பகுதிகள் வியாழக்கிழமை முதல் திடீரென கரும் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. கடல் பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும் நிலையில் கடல் அலையால் ஏற்படும் நுரையும் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசி வருகிறது. இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி கோடிமுனை உள்ளிட்ட கடல் பகுதிகள் பச்சை நிறத்திலேயே காட்சியளித்தன. இதனால்  கடல் பகுதிகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. மீன்கள் செத்து கரை ஒதுங்குவதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? இல்லை கடலில் கப்பல் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் இரசாயண ஆலை கழிவு கள் காரணமா? என மீன்வளத்துறை மற்றும் மத்திய கடல் ஆராய்சி நிறுவனம் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விபத்தில் இருவர் காயம்

களியக்காவிளை, நவ.18- கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள ஆர்சித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ் (48) அவருடைய நண்பர் பாஸ்கர். இவர்கள் இரண்டு பேரும் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் தொழிலா ளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.  சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனம் திருத்தோ புரம் பகுதியில் வந்த போது. எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது  மேதியது. இதில் இரண்டு பேரும்  படுகாய மடைந்தனர்.  படுகாயமடைந்த இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழிப்புணர்வுப் பேரணி

மேல்புறம், நவ.18- கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அரசுப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைப்பெற்றது. மேல்புறம் பகுதிக்குட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேல்புறம் அரசு உயர்நிலைப் பள்ளி, அரு மனை அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஷாஜி, ஒருங்கி ணைப்பாளர் சுந்தரமணி, தலைமையாசிரியர்கள் ஜெருஷா, தங்க சுகுணா, ஆசிரியர்கள்  சிறப்புப் பயிற்று நர்கள் றாபி, மேபல் ஷெரிபா, செலின் றீனா, ஹெலன் கிறிஸ்டல், சஜிதா  இயன்முறை மருத்துவர் அருள் சிசா, மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 9 - ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

குழித்துறையில்  இன்று மின் தடை

குழித்துறை, நவ.18- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, களியக்கா விளை, பளுகல்  அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்குட் பட்ட ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்ட விளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணைக் கிராமங்களுக்கும் சனிக் கிழமை (நவ.19) காலை எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

திருநெல்வேலி, நவ.18- களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு விளைநிலங்கள் உள்ளன.  விவசாயிகள் வாழை, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சமீப காலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.  கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துள்ள காட்டுப் பன்றிகள் கூட்டம் களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் (58) என்பவருக்குச் சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. அழிக்கப்பட்ட வாழைகள் ஏத்தன் ரகத்தைச் சேர்ந்தது.   இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பன்றிகள் அட்டகாசம் குறித்து விவசா யிகள் கூறுகையில், அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவேண்டும். பன்றிகளால் நாசமான விளை நிலங்களின் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விவசாயத் தொழிலாளர் சங்க எட்டயபுரம் மாநாடு

தூத்துக்குடி, நவ.18- அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் கோரிக்கை மாநாடு தூத்துகுடி மாவட்டம் எட்டயபுரத்தில் கருப்பசாமி தலைமையில் நடை பெற்றது தனபால் வரவேற்றார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு நிர்வாகிகள் செல்வகுமார், கண்ணன், மாணிக்க வாசகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  தாலுகா செயலாளர் நடராஜன் ஆகி யோர் பேசினர். மாநாட்டில் தாலுகா தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஆதீஸ்வரன், பொருளாளராக காளிராஜ் துணைச் செயலாளராக ஆறுமுகம், துணைத் தலைவராக சோலையப்பன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.  இந்த மாநாட்டில் 100 நாள் வேலை யை முழுமையாக வழங்க வேண்டும் 55 வயது நிறைவடைந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதி யம் வழங்க வேண்டும் வீடு, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவ சப் பட்டா வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டை அமைப்பின்  மாவட்டச் செயலாளர் தோழர் கு.ரவீந்திரன் நிறைவு செய்து பேசினார். தாலுகா தலைவர் கருப்பசாமி நன்றி கூறினார்.

நிலக்கடலை சாகுபடியில் தரமற்ற விதைகளா?

திருநெல்வேலி நவ 18- நிலக்கடலை சாகுபடியில் தரமற்ற விதைகள் விநியோகிக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். இது குறித்து திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாயிகள் கார்த்திகை பருவ நிலக்கடலை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.  விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கிய மானது. தரமான விதைகள் சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.  விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரும் விதை ரகங்களை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கவேண்டும். நீங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்புத் திறனில் குறைபாடுகளோ இருப்பின் அது குறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் 0462-2553017, விதை ஆய்வாளர்கள்- 9750427427 (திருநெல்வேலி), 96293 61660 (வள்ளியூர்), 93844 47338 (தென்காசி), 9965050077 (சங்கரன்கோவில்), 87541 92941 (நாகர் கோவில்) ஆகிய எண்களில் விதை ஆய்வு அதிகாரி களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

அதிகாரிகள் மீது புகார்

தூத்துக்குடி, நவ.18- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுக்  கூட்டம் புதுக்கோட்டையில்  ஒன்றியக் குழுத் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலை மையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சிப்  பணிகள் குறித்தும், சில பணிகள் நடை பெறும்போது அதிகாரிகள் முறையாக தக வல்கள் கொடுத்து பணிகளை துவக்குவ தில்லை என குற்றம்சாட்டினர். மாப்பிள்ளையூரணி, உமரிக்கோட்டை, முடிவைத்தானேந்தல், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, கூட்டுடன்காடு, குமார கிரி, சேர்வைக்காரன்மடம், தளவாய்புரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் தார்சாலை, பேவர் பிளாக் சாலை, கால்வாய் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், சரள் மேம் பாடு செய்தல் உள்ளிட்ட 34 புதிய பணி களை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட‌ 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருநங்கைகள் கைது

தூத்துக்குடி, நவ.18- தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் ஜெகதீசன் (65) கடந்த நவ.16-ஆம் தேதி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சில திருநங்கைகள் ஜெகதீசனிடம் பணம் கேட்டுள்ள னர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திர மடைந்த அந்த திருநங்கைகள் ஜெகதீசனை தாக்கி  அவரது இரு சக்கர வாகனச் சாவியை பிடுங்கியுள்ள னர். மேலும் அங்கு நின்றிருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷரிப்புதின் மகன் சசீருதின் (33) என்பவரையும் தாக்கி அவரிடமிருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து  ஜெகதீசன் அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வம் மகள் யாசினி (எ) அபினேஷ் (19), காயல்பட்டிணத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகள் பென்னிலா (எ) செல்வகணபதி (25), தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் சில்பா (எ) முத்துராஜ் (19) மற்றும் பாளையங் கோட்டை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சக்திவேல் மகள் பாவனா (எ) சரவணகுமார் (21) ஆகிய திருநங்கை களை கைது செய்தனர். 

விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்க ஆட்சியர் வலியுறுத்தல்

தூத்துக்குடி, நவ.18- பிரதமர் கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள், தங்களின் ஆதார் எண்ணை வரும் 30-ஆம் தேதிக்குள் இணைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத் துள்ளார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ விவசாயிகள் தொடர்ந்து தவணைத் தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். முதல் வழிமுறை, தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் https://pmkisan.gov.in என்ற பிரதமர் கிசான் திட்ட வலைத் தளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம். இரண்டாம் வழிமுறை, ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பிரதமர் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகை பதிவு செய்து விவ ரங்களை சரிபார்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15-ஐ பொதுச் சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய 2 வழிமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதார் விவரங்களை வருகின்ற 30-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரி வித்துள்ளார்.

திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தம்

திருநெல்வேலி நவ 18- மின்நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக திருநெல்வேலி  சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலக்கல்லூர், நடுக்கல்லூர், பொழிக்கரை, சங்கன் திரடு, சுத்தமல்லி, கொண்டாநகரம், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளன்குளம் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.  மூலக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருத குளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச் செல்வி, காடன்குளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந் தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி,சீவ லப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினா லாம்பேரி, குப் பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜ பதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அளவந்தான் குளம், செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூர்ணி, தோட்டாக் குடி, பத்தினிப்பாறை சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

ண்முகா நதி நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 

தேனி, நவ.18- உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி நீர்த் தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் திறந்து வைத்தார். சண்முகாநதி நீர்தேக்கத்திலிருந்து முதல் தொகுதி மற்றும் இரண்டாம் தொகுதியில் உள்ள புன்செய்  நிலங்கள் பயன்படும் வகையில் நீர் பாசன பகுதி களுக்கான தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார் .அதன் அடிப்படையில் வியா ழனன்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் திறந்து வைத்து, தெரிவிக்கையில், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள நீர் பாசனப் பகுதிகளுக்கான தண்ணீர் இன்றைய தினம் முதல் வினாடிக்கு 14.47 கனஅடி திறந்து விடப் பட்டுள்ளது.சண்முகாநதி நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், ஓடைப்பட்டி, கண்ணிசேர்வைபட்டி, வெள்ளையம்மாள்புரம் மற்றும் அழகாபுரி ஆகிய 8 கிராமங்களில் உள்ள 1640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார் . இந்நிகழ்வின் போது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, பொதுப்பணித்துறை செயற்  பொறியாளர் (நீர்வளத்துறை) அன்புச்செல்வன், சின்ன மனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நிவேதா அண்ணாதுரை, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின், விவ சாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மானாமதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளி  மாணவிகள் விளையாட்டில் சாதனை 

 சிவகங்கை,நவ.18-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் 7 போட்டிகளில் முதலி டம் பெற்று சாதனை படைத் துள்ளனர்.  குறுவட்ட அளவிலான குழு போட்டிகளில் மானா மதுரை அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி முதலிடமும், மாவட்ட அளவில் நடை பெற்ற மேசைப்பந்து போட்டி களில் வயது 14 ,17க்கு உள்ள ஒற்றையர் பிரிவில் முதலிட மும், 17 வயதுக்குள் இரட்டை யர் பிரிவில் முதலிடத்தை வென்றனர். எறிபந்து போட்டி யில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதலிடமும் ,கேரம் போட்டியில் 14 வயதுக்கு  உட்பட்ட ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 19 வயதுக்கு உட்பட்ட இரட்டையர்கள் பிரி வில் முதலிடம் வென்றனர். ஏழு அணிகளைச் சேர்ந்த மாணவிகள் மாநில போட்டி யில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். இவர்களை உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் தலைமை ஆசிரியை ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.  இப்பள்ளிக்கு போது மான விளையாட்டு மைதா னம இல்லாதது குறிப்பிடத் தக்கது.

குரூஸ் பர்னாந்து பிறந்த தினம் 

குரூஸ் பர்னாந்து பிறந்த தினம்  தூத்துக்குடி, நவ.18- தூத்துக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் குரூஸ்பர்னாந்து வின் 153-ஆவது பிறந்தநாள்  15-ஆம்தேதி கொண்டாடப்பட்டது. அவரது உருவச் சிலைக்கு மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது பர்ணாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  உள்ளிடட பலர் உடனிருந்தனர்.

மானாமதுரை பகுதி கண்மாய்களுக்கு  வைகை ஆற்றிலிருந்து  15 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு

 சிவகங்கை, நவ.18-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்மாய், மானாமதுரை அருகே உள்ள கால் பிரவு கண்மாய், கீழ மேல்குடிகண்மாய், கிருங்காக்கோட்டை கண்  மாய் துத்திக்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு வைகை ஆற்றுத் தண்ணீரை  வலது பிரதான கால்வாய் வழியாக அளிப்பது தொடர் பாக உடன்பாடு ஏற்பட்டது. மானாமதுரை அன்னி யந்தல் அருகே மிளகனூர் கால்வாய் செல்கிறது. வைகை ஆற்றில் இருந்து மிளகனூர் கால்வாய்க்கு அருகே இருக்கக்கூடிய வலது பிரதான கால்வாய் வழியாக துத்திக்குளம், கிருங்காக்கோட்டை, கீழ்மேல்குடி, கால் பிரவு மானாமதுரை ஆகிய கிரா மக் கண்மாய்களுக்கு வைகை ஆற்று தண்ணீரை அளிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு பிரச் சனை இருந்து வந்தது. இதன் காரணமாக நவம்பர்  17 அன்று மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத் தில் சிவகங்கை கோட்டாட்சி யர் சுகிதா தலைமையில் சமா தான கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்தில் மானா மதுரை வட்டாட்சியர் சாந்தி  மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் காசிராஜன், கீழ மேல்குடி ஊராட்சி மன்றத்  தலைவர் தர்மராமு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளமுத்து, மற்றும் இரு கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில், வைகை ஆற்றில் மிளக னூர் கால்வாய் அருகில் இருக்கக்கூடிய வலது பிர தான கால்வாய் வழியாக துத்திக்குளம், கிருகாக் கோட்டை கீழமேல்குடி ,கால் பிரவு மற்றும் மானாமதுரை கண்மாய்களுக்கு 5.12.2022 வரை தண்ணீர் அளிப்பது என்று இக்கூட்டத்தில் முடி வாகி சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது . 15 தினங்களும் எந்த பிரச்ச னையும் ஏற்படக் கூடாது என்று இரு தரப்பும் ஒப்பந்த மாகி கோட்டாட்சியர் முன்னி லையில் கையெழுத்திட்டுள்  ளனர்.

பானை ஓடுகள், எலும்புகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி, நவ.18- தூத்துக்குடி மாவட்டம் கொங்கராய குறிச்சியில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் பானை ஓடுகள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி நதிக்கரைகளில் அமைந் துள்ள ஊர்களில் முதல் முதலாக தொல்லி யல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா பல்வேறு ஆய்வுகளை நடத்தி, 37 தொல்லி யல் களங்களைக் கண்டறிந்தார். இவற்றில் ஒன்றான கொங்கராயகுறிச்சியில் காடு, திரடு போன்ற இடங்களில் தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதனொருபகுதியாக, திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிக்காக கொங்க ராயகுறிச்சிப் பகுதியில் வாய்க்காலின் நீரோட்டத்தை திருப்பி விடும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அந்தப் பள் ளத்தில் தொல் பொருள்கள், பானை ஓடுகள் சிதைவடைந்த நிலையில் புதைந்திருந்தன. மேலும், குவியல் குவியலாக எலும்புக ளும் கிடைத்துள்ளன. சாலை அமைக்கும் முன்பு தொல்லி யல் துறையினர் ஆய்வு செய்து இப்பகு தியைப் பாதுகாக்க வேண்டும் என்று வர லாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தேசிய இயற்கை மருத்துவ தினம் கடைப்பிடிப்பு

தென்காசி, நவ.18- தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சிறப்பு இயற்கை மருத்துவ முறை சிகிச்சை முகாம் எஸ்.தங்கப்பழம் மருத்து வக்கல்லூரி சார்பில் நடைபெற்றது. முகாமை டாக்டர்.பிரேமலதா, இணை இயக்குநர் (சுகாதாரம்) மற்றும் மருத்துவர் உஷா, கூடு தல் பொறுப்பு இணை இயக்குநர் (ஆயுஸ்) ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் இயற்கை மருத்துவ முறைகள், உணவுப் பழக்க-வழக்கங்கள், பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி அலுவலர்களுக்கு எடுத்து ரைக்கப்பட்டது. தொடர்ந்து யோகா பயிற்சி கள் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகளை எஸ்.தங்கப்பழம் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் எஸ்.தங்கப்பழம் யோகா மற்றும் இயற்கை மருத்துக்கல்லூரி உதவி முதல்வர் பாரதி இயற்கை மருத்துவர்கள் நிர்மலா, சுஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.