நத்தம், டிச.22- தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளத்தில் உள்ள புனித அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் கழிவு தெர்மோசெட்டிங் நெகிழிப் பொருட்களி லிருந்து பைராலிசீஸ் முறையின் மூலம் நெகிழி எரி பொருள் தயாரித்தல் என்ற தலைப்பில் நத்தம் இராம்சன்ஸ் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவி பூர்விகா தலைமையில் முகேஷ்வரன் மற்றும் குழுவினர் எழுதிய ஆய்வுக் கட்டுரை அகில இந்திய மாநாட்டிற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதையொட்டி தேர்வான மாணவ, மாணவி களை திருப்பத்தூர் ஏபிஎஸ்ஏ (APSA) கல்லூரி பேராசி ரியர்கள் பாலசுந்தரம், கோபிநாத், தமிழ்நாடு அறி வியல் இயக்க முன்னாள் தலைவர் மோகனா, மாவட்ட தலைவர் ராசு, செயலாளர் பரமேஸ்வரி, பள்ளியின் தாளா ளர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களையும் வழங்கினர். பள்ளி நாட்களில் அறிவியல் ஆய்வு செய்வது, ஆய்வின் முடிவை மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் வகையில் எடுத்துக் கூற வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் இளம் விஞ்ஞானிகளாக தேசியஅளவில் தேர்வில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களை பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன், துணை முதல்வர் அனுசியா தேவி பாராட்டி பேசினர்.