திருநெல்வேலி, நவ.6- நவம்பர் புரட்சித்தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட் டத்தில் 100 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடியேற்றப்படுகிறது. கொடிகளை பெண் தலைவர்கள் ஏற்றி வைக்கின்றனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 7-ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் ராதா புரத்தில் - 6, பாப்பாக்குடியில்-15, நெல்லையில்-15, அம்பா சமுத்திரத்தில் -6, நான்குநேரி- 3, பாளையங்கோட்டையில் -8, மேலப்பாளையத்தில்- 3, போக்குவரத்து- 8, சேரன் மகா தேவியில்-10, விக்கிரமசிங்கபுரத்தில்-5, களக்காடு- 5, மானூரில்-8, மின்சாரம்-8 என 100 இடங்களில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெறுகிறது. விழாவில், மாநிலக் குழு உறுப்பினர் பி.கற்பகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். செண்பகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் கு.பழனி, கீதா மற்றும் கட்சி யின் மூத்த தலைவர்கள் மூத்த தலைவர்கள் நிர்மலா ரணி, மல்லிகா, ஜெயராணி, செண்டு, ரபேக்காள், முத்து லட்சுமி, மாதர் சங்க தலைவர்கள் லதா, முத்துமாரி, பொன் எழில் மாதர் சங்க தலைவர்கள் கட்சிக்கொடி ஏற்றுகின்ற னர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.