districts

img

மதுரையில் ரௌடிகள் அட்டூழியத்தை முழுமையாக குறைக்க நடவடிக்கை

மதுரை, ஜன.11- மதுரை மாநகர புதிய காவல்  ஆணையராக நரேந்திரன் நாயர் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர், கடந்த  2005 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ்  அதிகாரியாவார். கேரளா மாநிலத் தில் ஐ.பி.பிரிவு எஸ்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற  நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டிஐஜி பணி யாற்றிய பின்னர், கோவை சரக டிஐஜியாகவும் பின்பு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பணி யாற்றினார்.  ஆணையாளர் நரேந்திரன் நாயர் செய்தியாளர்களி டம் கூறுகையில், “மதுரை மாநகரில் மக்கள் பணியில் முழு  ஈடுபாட்டுடன் பணியாற்றவுள்ளேன், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல், மற்றும் சித்திரை திருவிழாவை கொண்டாட மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்கும். மாநகரில் ரௌடிசம், கஞ்சா குற்றச்சம்பவங்களை முழு மையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தால் செயல்படுத்தபடும் அனைத்து திட்டங்களும் மேம்படுத் தப்பட்டு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.