மதுரை, ஏப்.26- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி பொது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும். 100நாள் வேலைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். ரேசன் கடைகளை நிறுத்தப்பட்ட 5 கிலோ உணவு தானியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகா தும்பைபட்டி கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்திற்கு கட்சியின் தும்பைபட்டி கிளைச் செயலாளர் ஏ.இராஜேஸ்வரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள் பேசினர். இதில் பலர் பங்கேற்றனர்.