districts

img

புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட தேர்வு: ஆர்வமுடன் பங்கேற்ற முதியவர்கள்

திண்டுக்கல், மார்ச் 22- திண்டுக்கல்லில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டத்தின் மூலம் முதியோர்களுக்கு வைக்கப்பட்ட தேர்வில் முதியவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். வயது வந்தோருக்கான புதிய கல்வித்திட்டம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் என்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தினமும் 2 மணி நேரம் வீதம் ஒரு வருட காலத்திற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம், நகர் பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் இந்த திட்டத்தின் படி கடந்த ஞாயிறன்று எழுத்தறிவு பயிற்சி பெற்ற தியவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசி ரியை மேற்பார்வையில் 2 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் அப்பகுதியில் உள்ள 40 முதியவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.