திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மர்மப் பொருளால் பரபரப்பு
திண்டுக்கல், நவ.26- திண்டுக்கல் ரயில் நிலையம் குட்செட் பகுதியில் அனுமந்த நகர் செல்லும் பாதையில் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு வெடிகுண்டு போல ஒரு மர்மப் பொருள் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டனர். அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தனர். வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி விடப்பட் டன. திண்டுக்கல் ரயில்வே போலீசார், திண்டுக்கல் வடக்கு போலீசார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த பொருளை பார்வையிட்டனர். சிவப்பு நிறத்தில் உள்ள பிளாஸ்டிக் பந்தில் வெள்ளை நிறத்தில் திரி போலவும், அது இன்சுலேசன் டேப் போல ஒட்டப்பட்டு இருந்தது. முதலில் உள்ளூர் வெடிகுண்டு சோதனை செய்யும் போலீ சார் அதனை ஆய்வு செய்ததும் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து மதுரையில் உள்ள வெடிகுண்டு நிபு ணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தனர். எந்த ஒரு சிக்ன லும் கிடைக்கவில்லை. மோப்ப நாய் லீமா மர்ம பொருள் அருகே சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் ஏதும் இல்லை என்பது போல் அமர்ந்து கொண்டது. இதனையடுத்து போலீசார் மர்மப் பொருளை ஒரு அலுமினிய பாத்தி ரத்தில் எடுத்துச்சென்றனர். (நநி)
டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
சிவகங்கை, நவ.26- தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் மற்றும் பட்டியலின இன மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்யும் ஆதிதிரா விட இனத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோர்க்கு 2023 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் நாளன்று விருது வழங்கு வதற்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன .இவ் விருது பெற விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் உரிய விண்ணப் பப்படிவத்தினை சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் பெற்று நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மேற்படி அலுவலகத்திற்கு உரிய ஆவ ணங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நத்தம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி பலி
நத்தம், நவ.26- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரை சேர்ந்த வர் பெரியசாமி. இவரது மகள் அமிர்தஸ்ரீ (11) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வெள்ளியன்று தாய் யுவன்யாவுடன் வேலம் பட்டி பகுதியில் உள்ள கண்மாய்க்கு துணி துவைக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி கண்மாய்க்குள் தவறி விழுந்து மூழ்கினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் தீயணைப்புத்துறையினர் கண்மாயில் இருந்து சிறுமியை மீட்டனர். ஆபத்தான நிலை யில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி அமிர்தஸ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
நிலக்கோட்டை அருகே தோட்டத்து கிணற்றில் பெண் குழந்தை சடலம்
சின்னாளப்பட்டி, நவ.26- நிலக்கோட்டை அருகே ஒன்றரை வயது பச்சிளங் குழந்தை தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருபவர் பாலு (42) .அவரது அக்கா மகள் துர்கா தேவி (26). இவர் எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (31) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒன்றை வயதில் ரத்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள தனது மாமா பாலு வின் தோட்டத்திற்கு துர்காதேவியும் அவரது குழந்தையும் வந்து தங்கியுள்ளனர். வெள்ளி இரவு முதல் விளை யாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும்,எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமையன்று காலை வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குழந்தை இறந்து சடலமாக மிதந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலக் கோட்டை தீயணைப்புத்துறை அதிகாரி புனிதராஜ் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள், குழந்தை ரத்திகாவின் உடலை மீட்டு நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தக வல் கொடுத்தனர். நிலக்கோட்டை காவல்துறை சார்பு ஆய் வாளர் பாலமுத்தையா நேரில் சென்று குழந்தையின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறை யினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சொத்து வரி செலுத்தாத அறக்கட்டளை அலுவலகத்திற்கு சீல் வைப்பு
இராஜபாளையம், நவ.26- இராஜபாளையம் ஏ.கே.டி அறக்கட்டளைக்கு 2011-2012 முதல் 2022-2023 வரை சுமார் ரூ.30 லட்சம் சொத்து வரி நிலுவை உள்ளது. ஏ.கே.டி. டிரஸ்ட்டிற்கும் இராஜபாளையம் நகராட்சிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்பும் நிலுவை தொகை செலுத்த வில்லை. நிலுவை தொகை செலுத்தக் கோரி அலுவலகம் மற்றும் டிரஸ்ட்டிற்கு சொந்தமான கடைகளுக்கு வாடகைதாரர் களுக்குரிய அறிவிப்புசெய்யப்பட்டுள்ளது. அதன் பின்பும் நிலுவை தொகைகள் ஏதும் நகராட்சிக்கு செலுத்தப்பட வில்லை. இந்நிலையில் சனிக்கிழமையன்று காலை இராஜபாளையம் நக ராட்சி ஆணையாளர் சோ.பார்த்தசாரதி தலைமையில் வருவாய் அலு வலர் மு.முத்துசெல்வம், வருவாய் ஆய்வர்கள் பாண்டி மற்றும் நகராட்சி பணியாளர்களால் ஏ.கே.டி.டிரஸ்ட் அலுவலகத்தை ஜப்தி செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயம்
தேனி ஆட்சியர் அதிரடி
தேனி, நவ.26- கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்க ளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு காப்பீடு, விபத்து காப்பீடு செய்ய வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சி யர் வலியுறுத்தியுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கனிம வளத்துறையின் சார்பில் குவாரிகளிலிருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களு டனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறு கையில், தமிழக அரசு குவாரிகளிலிருந்து கனிமங் களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்திட உத்தரவிட்டுள்ளது, எனவே, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 32 உடைகல் குவாரி, 9 மண் குவாரி, 4 கிராவல் குவாரிகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும். குவாரி தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், காப்பீடு செய்தல், விபத்து காப்பீடு செய்தல் போன்றவற்றை தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை (சமூக பாதுகாப்பு திட்டம்) தொடர்பு கொண்டு, குவாரி யில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் பட்டியலை அந்தந்த தொழிலாளர்களுடன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவு செய்திட வேண்டும். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப் பட்ட தொழிலாளர்கள் மற்றும் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் விபரங் களை விரைந்து உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் அளித்திட வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், புவியியல்-சுரங்கத்துறை உதவி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமோகன், துறை சார்ந்த அலுவலர்கள், குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மல்லி, பாமாயில் விலை குறைந்தது பாசிப்பருப்பு விலை உயர்வு
விருதுநகர், நவ.26- விருதுநகர் சந்தையில் பாமாயில், மல்லி விலை குறைந்துள்ளது. பாசிப்பருப் பின் விலை உயர்ந்தது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. இதில், பாமாயில் கடந்தவாரம் 15 கிலோ ரூ.1620 க்கு விற்பனையான நிலை யில், இந்த வாரம் ரூ.90 குறைந்து தற்போது ரூ.1530-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், கடந்த வாரம் 40 கிலோ மல்லி(லையன்) விலையானது ரூ.4900-5100 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ. 4700-4900 வரை விற்பனையாகிறது. அதேவேளை, கடந்த வாரம் 100 கிலோ பாசிப்பருப்பின் விலை ரூ.9600-க்கு விற் பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்த்தப்பட்டு ரூ.9700க்கு விற்கப்படுகிறது. மேலும், பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லையென அவ்விலைப் பட்டியல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது
வைகை அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது
தேனி, நவ.26- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த தால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 138 அடியாக நிலை நிறுத்தப்பட் டுள்ளது.. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இரு போக நெல் சாகுபடி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆண்டும் தொடர்ந்து பெய்த மழை யால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 387 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் 142 அடியை எட்டுவதில் தாம தம் ஆகிறது. சனிக்கிழமையன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணை யின் நீர்மட்டம் 67.26 அடியாக உள்ளது. 650 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சாலை விபத்தில் இருவர் பலி
சாத்தூர், நவ.26- சாத்தூர் அருகே 4 வழிச்சாலையில் பெத்துரெட்டிபட்டி விலக்கு என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையோரத்தில் இருந்த பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சக்கரவர்த்தி (57) சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். மேலும் ரேக்ளாண்ட் (60) என்பவர் மேல் சிகிச்சைக்காக திரு நெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சக்கரவர்த்தி என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நெல்லை ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்து முடித்த தனது மகன் அபிஷேக்கை காணச் சென்றதும், விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மரத்தில் மோதி பெண் பலி
திருச்சுழி, நவ.25- திருச்சுழி அருகே சாலையில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர்களான பாலசுந்தர்(31). இவரது மனைவி செல்வாம்பிகா (25).தாயார் சரோஜா(55) ஆகியோர் ஒரே காரில் அருப்புக்கோட்டை நோக்கி புறப்பட்டனர். காரை பாலசுந்தர் ஓட்டியுள்ளர். இந்தநிலையில், பரளச்சி அருகே கார் சென்ற போது, திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சரோஜா (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பாலசுந்தர் மற்றும் அவரது மனைவி செல்வாம்பிகா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
அகமலை மலைகிராமத்தில் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா
வருவாய்த்துறையினர் நடவடிக்கை
தேனி, நவ.26- பெரியகுளம் அருகே உள்ள அகமலை மலைகிராமத்தில் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வரு கிறார்கள். தேனி மாவட்டம், போடி வட்டம், பெரிய குளம் அருகே உள்ள அகமலை ஊராட் சிக்கு உட்பட்ட பகுதிகளான ஊரடி, ஊத் துக்காடு, கரும்பாறை, குறவன் குளி உள் ளிட்ட வனப்பகுதிகளில் பழங்குடி இனத்தை சேர்ந்த 37 குடும்பங்கள் வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களுக்கு அரசால் வீட்டுமனை பட்டா எதுவும் வழங் காத நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் குகை கள், பாறை இடுக்குகள் மற்றும் வனப்பகு தியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வரு கின்றனர். எனவே பழங்குடியின மலைவாழ் மக்கள் குடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை யடுத்து தற்பொழுது பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்த மான நிலத்தை தேர்வு செய்து அதில் பழங்குடியினத்தை சேர்ந்த 37 குடும்பங்க ளுக்கு வீட்டுமனை வழங்க போடி வட்டாட்சி யர் ஜலால் நடவடிக்கை எடுத்து வருகின்றார். இதுகுறித்து பழங்குடியின மலைவாழ் மக்கள் கூறுகையில், வீடின்றி வாழ்ந்து வரும் தங்களுக்கு இந்த இடத்தை தேர்வு செய்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதோடு தங்களின் குழந்தைகள் இனிமேலாவது கல்வி கற்று தங்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என நம்பி உள்ளதாகவும் இந்த இடத்தில் அரசு விரைவாக வீடு கட்டி தங்க ளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.