திண்டுக்கல், டிச.14- குஜராத் மாநிலத்தில் ஜனவரி 27 அன்று நடைபெறும் அகில இந்திய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் திண் டுக்கல் மாவட்டம் நத்தம் ராம்சன் பள்ளி யைச் சேர்ந்த 15 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர். திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற குழந்தை விஞ்ஞானிகள் 159 பேர் தங்கள் கண்டுபிடிப்புகளை அறிக்கை களாக சமர்ப்பித்தனர். இதில் 15 குழந்தை விஞ்ஞானிகளின் அறிக்கைகள் தேர்ந்தெ டுக்கப்பட்டன. இந்த குழந்தைகள் தூத் துக்குடியில் கடந்த டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான மாநாட்டில் தங்கள் அறிக்கைகளை சமர்ப பித்தனர். இந்தமாநாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 528 குழந்தை விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 30 விஞ்ஞானிகள் ஜனவரி 27 ஆம் தேதி குஜராம் மாநிலம் அகமதாபாத்தில் நடை பெறும் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று தங்கள் ஆய்வுகளை சமர்ப்பிக்க உள்ள னர். இந்த மாநாட்டில் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராம்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யை சேர்ந்த மாணவர்களின் ஆய்வு தேர்ந் தெடுக்கப்பட்டு அந்த குழந்தை விஞ்ஞானி கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறி வியல் இயக்கம் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள் ளது. குழந்தை விஞ்ஞானிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, சங்கத்தின் மாவட்ட தலைவர் இராசு, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், சார்பாக சிறப்பாக மாணவர்களை வழிநடத்திய பள்ளி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரி விக்கப்பட்டுள்ளது. (நநி)