districts

அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பெயர் நீக்கம்

விருதுநகர், நவ.24- விருதுநகரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பித ழில் மாவட்டத்தைச் சார்ந்த எதிர்க்கட்சி எம்.பிக்களின் பெயர்கள் அச்சிடப்பட வில்லை. மேலும் முறையான அழைப்பும் அவர்களுக்கு விடுக்கப்படவில்லை.  இதுகுறித்து விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர், சபா நாயகருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். இதை யடுத்து, ஒன்றிய நிதித்துறை செயலாளரும், வங்கி நிர்வாக மும் 15 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என மக்க ளவை துணை செயலாளர் தெரிவித்துள்ளார்.   விருதுநகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகழ்ச்சி யில் நவம்பர் 19 அன்று மாலை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, சாலையோர வியா பாரிகளுக்கு கடன் தொகைக் கான ஆணைகளை வழங்கி னார். நிகழ்ச்சிக்கான அழைப்பி தழில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார், இராம நாதபுரம் தொகுதி எம்.பி.,  நவாஸ்கனி ஆகியோரின் பெயர்கள் அச்சிடப்பட வில்லை. மேலும், அவர்க ளுக்கு முறையான அழைப் பும் விடப்படவில்லை.   இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவசர புகார் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, 15 நாட்களுக்குள் ஒன்றிய நிதித்துறை செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகமும் பதில் அளிக்க வேண்டும் என மக்களவை துணை செயலாளர் பாலகுரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.