மதுரை மாநகராட்சி 26 வது வார்டு நரிமேடு பகுதி சிங்கராயர் காலனியில் சு.வெங்கடேசன் எம்.பி. நிதியில் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மாமன்ற உறுப்பினர் சொக்காயி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், வடக்கு - 2 பகுதிக் குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்ட குழு உறுப்பினர் கே. அலாவுதீன், வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, கட்டுமான தொழிலாளர் சங்க பகுதிக்குழு தலைவர் ஜாகீர், குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் நேரு, திலகவதி, வெங்கடேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.