மதுரை, ஆக.3- மதுரை மாநகராட்சி 23 வது வார்டு செல்லூர் மெயின் ரோடு முதல் குல மங்கலம் சாலை பகுதியில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்ட குழாய் பதிக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியால் சாலையை மேம் படுத்துதல், செல்லூர் கண்மாய் கரை பகுதியை தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் தாமதமாகி வருகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் குடிநீர் குழாய் மற்றும் பாதாளச்சாக் கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் இடை யூறு ஏற்பட்டது. இது குறித்து 23 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல் கூறுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட குழாய் பதிக்கும் பணி இன்னும் முடியவில்லை. இதனால் செல்லூர் - குலமங்கலம் சாலை அமைக்கும் பணியானது சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப் பட்டுள்ளது. பாதாளச்சாக்கடை குழாய் பதிக்கும் பணி, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி போன்றவை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
குழாய் பதிக்க தோண்டப்படும் பள் ளங்களால் தெருக்களுக்கு வரும் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு உடைந்துவிடுகிறது. கடந்த இரண்டு தினங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிகளவில் குடிநீர் வெளி யேறி வெள்ளம் போல் காட்சியளித் தது. சில தினங்களுக்கு முன் பாதா ளச்சாக்கடை குழாய் உடைப்பு ஏற் பட்டு சரி செய்யப்பட்டது. ஒப்பந்த தாரர்கள் பணியை மிகவும் மந்த மான முறையில் செய்து வருகிறார் கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மீனாட்சி புரம் பகுதியில் இருந்து செல்லூர் செல்லும் வாகனங்கள், தற்போது செல்லூர் பகுதிகளில் உள்ள சில தெருக்கள் வழியாக வரக்கூடிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெருப் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ் வொரு மாமன்ற கூட்டத்திலும் இதற் கான கோரிக்கையினை முன்வைத்து பேசி வருகிறேன் .விரைவில் முடித்து விடுவோம் என்று மட்டுமே அதிகாரி கள் பதிலளிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதியும் தொட ர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் பணிகள் முடிந்தபாடில்லை. கண்மாய்க்கரை பகுதியிலும் பணி கள் மிகவும் தாமதமாகிக் கொண்டே வருகின்றது. எனவே இந்த குழாய் பதிக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தெரிவித்தார்.