திருநெல்வேலி, ஜூன் 26- நெல்லை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தின் நிர்வாக குழு கூட்டம் சிஐடியு அரசு போக்குவரத்து சங்க அலுவலகத்தில் நடை பெற்றது கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்,மாவட்ட பொருளாளர் வலதிபெரு மாள் முன்னிலை வகித்தார், நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச்செயலாளர் ஆர். முருகன் வேலை அறிக்கை யை சமர்ப்பித்த பேசினார்.தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி பேசி னார். சிஐடியு அரசு போக்கு வரத்து சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஆட்டோ சங்கத்தின் பொறுப்பாளரு மான ஜோதி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி நடை பெறும் மாநிலம் தழுவிய நல வாரிய குளறுபடிகளை கண் டித்து நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் பங்கேற்பது. களக்காடு தலையணை செல்ல ஆட்டோக்களுக்கு இரண்டு டோக்கன் முறை யை ரத்து செய்யக்கோரி இயக்கம் நடத்துவது, விக்கிர மசிங்கபுரம் பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஆட்டோ செல்ல அனுமதி கோரி இயக்கம் நடத்து வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிறைவாக மாவட்ட பொருளாளர் எஸ் வலதி பெருமாள் நன்றி கூறினார்.