மதுரை, ஜன.6- உயர்கல்வியைக் காப் போம் முழக்கத்துடன் மது ரையில் மூட்டா பொன்விழா மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு தேசியக் கல்விக் கொள்கை தேவை யில்லாத ஒன்று என மூட்டா அமைப்பு கூறியுள்ளது. மூட்டா (மதுரை காம ராசர், மனோன்மனியம்சுந்தர னார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழ கங்களுக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரி களில் பணிபுரியும் பேராசி ரியர்களின் சங்கமாகும்). 1972-ஆம் ஆண்டு தொ டங்கப்பட்ட இந்த அமைப்பு பொன்விழாவை கொண்டா டுகிறது. அதனொரு பகுதி யாக சனி. ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மதுரை யில் “உயர் கல்வியைக் காப் போம்” என்ற முழக்கத்துடன் மாநாடு நடத்துகிறது. மாநாட்டையொட்டி வெள்ளியன்று செய்தியா ளர்களைச் சந்தித்த அமைப்பின் பொதுச் செய லாளர் முனைவர் எம். நாக ராஜன், தலைவர் முனை வர் சி. இராதா கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது “ மாநாட்டில் 1000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். “உயர் கல்வியைக் காப்போம்” என்ற கருப்பொ ருளை தாங்கி இந்த மாநாடு நடைபெறுகிறது. ஒன்றிய அரசு தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க முயல்கிறது.
இது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் தமிழகத்தில் 50 சதவீதம் பேர் பள்ளிக் கல்வியைத் தாண்டி கல்லூரி கல்விக்கு வந்துள்ளனர். தேசியக்கல்விக் கொள்கை யின் அடிப்படை நோக்கத் தை ஏற்கனவே தமிழக அரசு எட்டிவிட்டது. தமிழகத்தில் சுயநிதிக்கல்லூரிகளின் மாணவர்சேர்க்கை, கல்விக் கட்டண நிர்ணயம், பணிப் பாதுகாப்பு ஆகியவற்றிற் கென தனி அமைப்பை உரு வாக்க வேண்டும். இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு சட்டம் இயற்றியுள்ளது. கேரளத்திற்கும்-தமிழகத் திற்கும் பிரத்யேக சட்ட மியற்றுவதில் வித்தியாசம் உள்ளது. கேரளத்தின் முன் மாதிரியைப் பின்பற்றி சட்டமியற்ற வேண்டும். சுய நிதி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர். இந்த மாநாட்டில் பால பிரஜாபதி அடிகளார், மாநில சிறுபான்மையினர் ஆணை யத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசன், பொதுப்பள்ளிக ளுக்கான மாநில மேடையின் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திபாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். மாநாட்டு மலரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.சந்திரசேகர் வெளியிடுகிறார். தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்க செயலாளர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் பெற்றுக் கொள்கிறார்.