மதுரை,மார்ச் 29- திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து,வாக்குச் சேகரிக்கும் வகையில் சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மார்ச் 28 வியாழக்கிழமை யன்று பெத்தானியாபுரத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணைப் பொதுச்செயலாளர் க.திருச்செல்வன், மாநில உதவித்தலைவர் எம்.மகாலெட்சுமி, மாநி லச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சிஐடியு ஆட்டோ சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் டெய்சி, மாவட்டச் செய லாளர் இரா.லெனின், மாநிலக்குழு உறுப்பினர் மணிமேகலை ஆகியோர் பேசினர்.
சிஐடியு மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் லூர்து ரூபி மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேசிய தாவது:
மோடி ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகள் விவ சாயமும் தொழில்களும் செத்த ஆண்டுகள். இந்த நாடாளுமன்றத் தேர்தல் நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க நடைபெறுகின்ற தேர்தல். அம்பானி, அதானிகளை தவிர இன்றைய இந்தியாவில் பெரும்பாலானவர்களின் வயிறுகள் பட்டினியா கத்தான் இருக்கின்றன. மோடி ஆட்சியில் இந்திய மக்கள் அல்லாடுகிறார்கள்.
அனைத்து மாவட்ட மக்களுக்கும் வேலை கொடுத்த திருப்பூரில் பெரும்பாலான தொழிற் சாலைகள் மூடிக்கிடக்கின்றன.
வாங்கும் சக்தியைப் பறித்த மோடி அரசு
மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. அன்றாடம் மக்கள் செலவழிக்கும் திறனும், தொகையும் குறை ந்துவிட்டது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள் ளது. மோடியின் ஆட்சியில் வருமானம் உயராமல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருகிறது. இது மோடி ஆட்சியின் அவலத்தைக் காட்டுகிறது.உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. வேலையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. அன்றாடம் வேலையி ழப்போர் அதிகம் உள்ள நாடும் இந்தியாதான்.
பொதுத்துறைகள்தான் இந்திய பொருளாதா ரத்தின் அடித்தளம்.ஆனால் பொதுத்துறையான பிஎஸ்என்எல்-இன் கழுத்து நெரிக்கப்படுகிறது.ஊழியர்களின் தொடர் போராட்டத்திற்கு பின்னர் தான் பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டுள்ளது.அதுவும் இப்போது தான் ஆந்திராவிற்கு வந்துள்ளது.
ஏகபோக முதலாளிகளின் ஆட்சி
நேரு ஆட்சிக்காலத்தில் ஏகபோக தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு நிறுவனத்திடமே அனைத்தையும் கொடுப்பது தடுக்கப்பட்டது. அத்தி யாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருந்தது.ஆனால் இப்போது மோடி ஆட்சியில் ஏகபோகம் வளர்க்கப் படுகிறது. இந்தியாவை முதலாளிகளின் அடிமை யாக்கும் ஆட்சி நடக்கிறது.
வட மாநில தொழிலாளர்கள் இங்கு குவிய என்ன காரணம்?
கோவை மேற்கு பகுதியில் ராஜஸ்தான் மற்றும் வடமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எப்போதும் அவர்கள் பாஜகவை ஆதரித்தவர்கள், ஆனால் இப்போது இடதுசாரிகளை ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அவர்கள் சொன்னது என்ன வென்றால், மோடி ஆட்சியில் எங்கள் தொழில்கள் அழிந்துவிட்டன. மோடி ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்று கோபத்துடன் கூறுகிறார்கள்.
பெரும்பான்மை இந்துக்களை தவறாக வழிநடத்துவது பாஜகதான். இந்து முதலாளிக ளுக்கு சலுகைகளை வழங்கிய பாஜக அரசு, இந்து தொழிலாளிகளுக்கு எதுவும் செய்யவில்லை.அவர்கள் வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குத் தான் வேலைக்கு வருகிறார்கள்.
தமிழ்ப் பண்பாட்டின் காவலர்
ஏப்ரல் 19 அன்று நடைபெறுகின்ற நாடாளு மன்றத் தேர்தலில் மக்கள் வாக்களித்து பாஜக வின் மோடி ஆட்சியை தூக்கியெறிவோம். தமிழ்ப் பண்பாட்டின் காவலரான சு.வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்க ளித்து மதுரை மக்கள் வெற்றிபெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.