மதுரை, மார்ச் 13- வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண் டும். அனைத்து வேளாண் வேலை பொருட் களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தேனி மாவட்டத்தில் சிஐடியு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. கம்பம் காந்தி சிலையிலிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க பிரச்சாரம் துவங்கி யது. சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்க ளில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு ஏரியா செயலாளர் வி.மோகன், விவசாயி கள் சங்க ஏரியா செயலாளர் கே.கர்ணன், விதொச ஏரியா செயலாளர் எம்.காஜா மைதீன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் துவக்கி வைத் தார். மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர் வேல், எச்.ஸ்ரீராமன், நித்யகுமார் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர் .மாநிலக் குழு உறுப்பினர் ஏ.லாசர் நிறைவு செய்து பேசினார். கூடலூரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிஐடியு தலைவர் பி.ஜெயன், விவசாயிகள் சங்க ஏரியா செயலாளர் எஸ்.மணிகண் டன், விதொச ஏரியா செயலாளர் ஜி.பி.முரு கன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியா செய லாளர் பி.ஜெயராஜ், உசேன், ப்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . சின்னமனூரில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலை வர் எம்.மணிகண்டன், விதொச ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜெயசக்தி ஆகியோர் தலைமை வகித்தனர். விதொச மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு சிறப்புரை யாற்றினார். விவசாயிகள் சங்கத் தலை வர்கள் பி.சேகர் ,என்.நடராஜன், விதொச நிர்வாகிகள் அம்சமணி, எஸ்.ஈஸ்வரன், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.