மதுரை, டிச.18- மதுரை அமெரிக்கன் கல்லூரி கூட்ட ரங்கில் சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி டிசம்பர்18 ஞாயிறன்று நடை பெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் -வெளி நாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலம் - மக ளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், நிதி- மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் வ.இந்தி ராணி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் மா.கணேசன், சிறுபான்மை நலக் குழு மாவட்ட தலைவர் கே. அலாவுதீன், செயலாளர் என். கணேசமூர்த்தி, பொரு ளாளர் ஜான்சன், துணை தலைவர் ரசூல், துணைச்செயலாளர்கள் போனிபேஸ், ஜான் மைக்கேல் ஆகியோர் அமைச்சர் கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மையினர் துறை செயலாளர் சுரேஷ்குமார் மதுரை மாவட்ட ஆட்சி தலை வர் ஆகியோரிடம் மனு அளித்தனர். விடுதலைப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு அரசு மரியாதை செய்திட வேண்டும், மதுரை ஜெய்ஹிந்த் புரம் ஜீவா நகர் ஜமாத் முஸ்லிம் மக்க ளுக்கு அடக்கஸ்தலம் கிடைத்திட வேண் டும், விசாரணை இன்றி மிக நீண்ட காலம் சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்திட வேண்டும். தேசம் முழு வதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகளை ஒன்றிய, மாநில அரசுகள் தடுத்திட வேண்டும். சிறுபான்மை மக்க ளுக்கு பாத்தியப்பட்ட இடங்களில் வழி பாட்டுத் தலங்கள் அமைத்திட அனுமதி வழங்க வேண்டும்.ஏழை, எளிய இஸ்லா மியர்களுக்கு வக்பு வாரிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும். சிறுபான்மையினர் சொந்த ஜாமீனில் கடன் பெற தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மனு வில் வலியுறுத்தியுள்ளனர்.