districts

img

மதுரை சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு

மதுரை, ஏப்.30-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதி திமுக சார்பில், எம்.சத்தி ரப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.   தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ்  சேகர், ஜல்லிக்கட்டுப் போட்டிக் கான உறுதிமொழியை வாசிக்க,  அமைச்சர், பி.மூர்த்தி, விலங்குகள் நலவாரிய உறுப்பினர் மிட்டல் முன்னிலையில் ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு போட்டி தொடங்கியது. போட்டியை அமைச்சர்கள் ஏ.ஆர். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகி யோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.   ஜல்லிக்கட்டில் காளை களை அடக்க முயன்ற 20 க்கும்  மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காய மடைந்தனர். இதில் 6 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  ஜல்லிக்கட்டில் காளைகளை சிறப்பாக அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், மிதிவண்டி, எல்இடி தொலைக்காட்சி, கட்டில், பீரோ, கிரைண்டர் உள்  பட ஏராளளமான பரிசுகள்  வழங்கப்பட்டன. பிடிபடாத  காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட் டன.  750 மாடுபிடி வீரர்கள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவ கங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்  டங்களில் இருந்து 1220 காளை களும் பங்கேற்றன.  ஊரகக்காவல் கண்காணிப்பா ளர் ஆர். சிவபிரசாத் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்  துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.   இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மு.  மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினரும் மதுரை மக்க ளவை உறுப்பினருமான சு.வெங்க டேசன்,  புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா ,மாவட்டக்குழு உறுப்பி னர் பாலகிருஷ்ணன், கிளைச்செய லாளர் ஆஞ்சி ஆகியோர்  கலந்து கொண்டனர். திமுக நிர்வாகிகள் உட்பட ஜல்லிக்கட்டை காண  ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். முடிவில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற திரு மாஞ்சோலையைச் சேர்ந்த அஜய்  குமார் சிறந்த மாடுபிடி வீரராக அறி விக்கப்பட்டு அவருக்கு கார் பரி சாக வழங்கப்பட்டது. 19 காளை களை அடக்கி இரண்டாமிடம்  பெற்ற மதுரை ஜெய்ஹிந்த்புரத் தைச் சேர்ந்த விஜய்க்கு புல்லட் வாகனம், 18 காளைகளை அடக்கி மூன்றாமிடம் பெற்ற கருப்பாயூரணி யைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்  கப்பட்டது. இதேபோல சத்தி ரப்பட்டியைச் சேர்ந்த தங்கப் பாண்டி விஜயா ஆகியோரின் காளை சிறந்த காளையாக தேர்ந் தெடுக்கப்பட்டு முதல் பரிசாக கார்  பரிசாக வழங்கப்பட்டது.  ஆண் டாள்கொட்டாரம் ஜிஎம் உதயா, காமேஷ் ஆகியோரின் காளைக்கு இரண்டாவது பரிசாக புல்லட் வாக னம், சத்திரப்பட்டியைச் சேர்ந்த யோககுரு, உதயா ஆகியோரின் காளைக்கு மூன்றாவது பரிசாக  இருசக்கர வாகனம் வழங்கப் பட்டது.