districts

img

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்

சிவகங்கை, ஆக.26- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3 பள்ளிகள், நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட 1 பள்ளி  என 4 பள்ளிகளை சார்ந்த 332 மாணாக்  கர்களுக்கு ரூ.16.07 லட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை கூட்டுற வுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப் பன் வழங்கினார்.  நிகழ்ச்சியில், இப்பள்ளிகளில் 10, 12-ம்  வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பெற்ற வர்களுக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம்  இடம் பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம்,  மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயி ரம் என மொத்தம் 12 மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையினை அமைச்சர் தனது  சொந்த நிதியிலிருந்து வழங்கினார். மேலும்,  பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கென தலா  ரூ.10,000/- வீதம் பள்ளிகளின் புரவலர் திட்ட  நிதிக்கெனவும் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.  நிகழ்ச்சியில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்  றிய குழுத்தலைவர் சண்முகவடிவேல், நெற்குப்பை பேரூராட்சி தலைவர் பழனியப்  பன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ,  மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.