districts

img

வெற்றிபெற்ற 1,851 பேருக்கு பரிசுகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

இராமநாதபுரம், ஜூன் 18-  இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம்  முதல்வர் கோப்பைக்கான, இராமநாத புரம்  மாவட்ட அளவிலான  விளையாட்டுப்  போட்டிகளில் வென்ற  வீரர், வீராங்கனை களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி  நடை பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்  தலைமை வகித்தார்.  முதலமைச்சர் கோப்பைக்கான லோகோ மற்றும்  குறும்படத்தை  வெளியிட்ட பிற் படுத் தப்பட்டோர் நலம், கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், வெற்றிபெற்ற 1,851 வீரர்,  வீராங்கனைகளுக்கு பரிசுகளை  வழங்கிப் பேசினார்.  அமைச்சர் பேசுகையில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட  விளையாட்டு போட்டிகள் நடந்தன.  8,190 பேர் பங்கேற்ற போட்டிகளில்  முதல் 3 இடம்  பிடித்தோ ருக்கு  முறையே ரூ.3 ஆயிரம்,  ரூ.2 ஆயிரம்.  ஆயிரம் ரூபாய் என ரொக்கப் பரிசு பாராட்டு  சான்று  வழங்கப்படுகிறது. இதில் வென்ற  வீரர், வீராங்கனையர் மாநில போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடி தரவேண்டும் என்றார்.   மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு, முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர்  தினேஷ்குமார், மண்டபம். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள்  சுப்பு லட்சுமி,  புல்லாணி, ஹாக்கி பயிற்றுநர் மணி கண்டன்  அரசு அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.