districts

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள்

சிவகங்கை, மே 21- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் ரூ.30.50 கோடி  மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், கூடுதல் ஒருங்கிணைந்த அவசர கால தாய்சேய் நல சிகிச்சை மையம் மற்றும் 50 படுக்கை கள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய கட்டிடங்களுக்கான கட்டுமானப்பணியை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணி வண்ணன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து  உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத் தப்பட்டு, நவீன மருத்துவ உபகரணங்களும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளன. மேலும், தேவையின் அடிப்ப டையில் கூடுதல் மருத்துவ உபகர ணங்கள் வழங்கவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருத்துவத்தை எளிதாக கிடைக்கப்பெறச்  செய்து, அவர்களின் உடல்நலத்தை பேணிக் காக்கின்ற வகையில், மருத்து வத்துறையில் பல்வேறு சிறப்புத் திட்டங் களை செயல்படுத்தி, பொதுமக்களின் நலன் காத்து வருகிறார்கள். பொதுமக்கள் அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று, தங்களின் உடல்நலத்தினை சிறந்த முறை யில் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். இன்றையதினம் துவக்கி வைக்கப் பட்டுள்ள இந்த 2 கூடுதல் பிரிவு கட்டி டங்களை தரமான முறையில் விரைந்து  முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  அர்ப்பணித்திட துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சத்தியபாமா, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆன்ந்த், திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தா ராணி, வாணியங்குடி ஊராட்சி மன்றத்தலை வர் புவனேஷ்வரி, மருத்துவக் கண்கா ணிப்பாளர் குமரவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.